‘அறிமுக தொடரிலேயே இது நடந்துருக்கு’!.. கோப்பையுடன் ‘சூர்யகுமார் யாதவ்’ பதிவிட்ட உருக்கமான பதிவு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடியது குறித்து சூர்யகுமார் யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்த தொடரில் பல இந்திய இளம் வீரர்களின் பங்கு சிறப்பாக இருந்தது. பலம் வாய்ந்த இங்கிலாந்து அணிக்கெதிரான இந்த வெற்றி இந்திய அணிக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.

இந்நிலையில் டி20 தொடரை அடுத்து இரு அணிகளும் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று (23.03.2021) புனே மைதானத்தில் நடைபெற உள்ளது. ஏற்கனவே டெஸ்ட், டி20 தொடரை கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரையும் கைப்பற்ற இந்திய அணி முனைப்பு காட்டி வருகிறது. அதேபோல் டி20 தொடரில் வாய்ப்பு கொடுத்ததைப் போல ஒருநாள் தொடரிலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிலும் குறிப்பாக டி20 தொடரில் இந்திய அணிக்காக அறிமுகமாகிய சூர்யகுமார் யாதவ் 3-வது டி20 போட்டியில் 31 பந்துகளில் 57 ரன்கள் அடித்து, இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். அதனைத் தொடர்ந்து கடைசி டி20 போட்டிகளில் 17 பந்துகளில் 32 ரன்கள் அடித்து அசத்தினார். இவரது ஆட்டத்தை இந்திய முன்னாள் வீரர்கள் பலரும் பாராட்டினர். தற்போது இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் சூர்யகுமார் யாதவ் இடம்பிடித்துள்ளார்.

இந்த நிலையில் இந்திய அணியில் இடம்பிடித்து விளையாடிய அனுபவம் குறித்து சூர்யகுமார் யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘அறிமுக தொடர் என்பதே சிறப்பு. அதிலும் அறிமுக தொடரிலேயே கோப்பையை வென்றது அதைவிட சிறப்பு’ என கோப்பையுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்