ரெய்னாவுக்கு CSK போட்ட 'ட்வீட்'.. உடனே 'சின்ன' தல போட்ட கமெண்ட்.. அப்படி என்ன விசேஷம்?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சுரேஷ் ரெய்னா தொடர்பாக சிஎஸ்கே போட்டுள்ள ட்வீட் ஒன்று, தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

15 ஆவது ஐபிஎல் தொடர், வரும் 26 ஆம் தேதி அன்று ஆரம்பமாகவுள்ளது. இதன் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.

இதில், கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வந்த சுரேஷ் ரெய்னாவை அந்த அணி ஏலத்திற்கு முன்பாக அணியில் இருந்து விடுவித்திருந்தது.

களமிறங்காத ரெய்னா

தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற மெகா ஏலத்தில், சென்னை உள்ளிட்ட எந்த அணிகளும், ரெய்னாவை ஏலத்தில் எடுக்க முனைப்பு காட்டவில்லை. இதனால், அவர் 'Unsold' என அறிவிக்கப்பட்டிருந்தார். சுமார் 10 சீசன்களுக்கு மேல், சென்னை அணிக்காக ஆடியுள்ள ரெய்னா, ஐபிஎல் தொடரில் பல அரிய சாதனைகளை செய்து அசத்தியுள்ளார்.

வேற மாதிரி என்ட்ரி

ஐபிஎல் தொடரின் நம்பர் 1 வீரரான ரெய்னாவுக்கு, 'Mr. IPL' என்ற பட்டப் பெயரும் உள்ளது. அப்படிப்பட்ட ஒரு வீரர், ஐபிஎல் தொடரில் களமிறங்காமல் போவது, ரசிகர்கள் மத்தியில் கடும் வேதனையை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், ஐபிஎல் தொடரில் அவர் வர்ணனையில் ஈடுபடவுள்ளது பற்றி, அதிகாரபூர்வ தகவல்கள் நேற்று வெளியானது.

ஆவலுடன் ரசிகர்கள்

ஐபிஎல் போட்டிகளில் ஆடவில்லை என்றாலும், ஐபிஎல் தொடரில், தனது பங்களிப்பை ரெய்னா அளிக்கப் போவதால், ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதே போல, சென்னை போட்டிகளில் ரெய்னா பேசுவதை கேட்கவும், ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இதனிடையே, சிஎஸ்கே மற்றும் ரெய்னா ஆகியோருக்கு இடையே ஏதோ பிரச்சனை இருந்ததால் தான், ரெய்னாவை அணியில் எடுக்கவில்லை என தகவல்கள் பரவி வந்தது.

ஆனால், சென்னை அணி தொடர்பான பதிவுகளில் தொடர்ந்து கமெண்ட் செய்து, அனைத்தும் வதந்திகள் தான் என சொல்லாமல் சொல்லி அடித்தார் ரெய்னா. இந்நிலையில், ரெய்னா தொடர்பாக சிஎஸ்கே போட்டுள்ள பதிவு ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

வாழ்த்து சொன்ன சிஎஸ்கே

ரெய்னாவின் மகனான ரியோ, தனது இரண்டு வயது பிறந்தநாளை இன்று கொண்டாடி உள்ளார். இது தொடர்பாக மகனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் பதிவிட்ட ரெய்னா, மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்தினை தெரிவித்திருந்தார்.



இதனையடுத்து, ரியோவின் புகைப்படத்தினை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.

இதற்கு ரெய்னாவும் கமெண்ட் செய்துள்ளார். அணியில் இருந்து விலகிச் சென்றாலும், சிஎஸ்கே மற்றும் ரெய்னா இடையேயான பிணைப்பு போல எதுவுமே இல்லை என நெகிழ்ச்சியுடன் கமெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.

SURESHRAINA, MSDHONI, CHENNAI-SUPER-KINGS, CSK, IPL 2022, சிஎஸ்கே, சுரேஷ் ரெய்னா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்