"நான் வீழ்வேனென்று நினைத்தாயோ??..." வேற 'லெவல்' ஆட்டம் காட்டிய 'சிஎஸ்கே'... ஆரவாரத்தில் திளைத்த 'ரசிகர்கள்'

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திய நிலையில், தொடர்ச்சியாக பெற்ற 3 தோல்விகளுக்கு சென்னை அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

அது மட்டுமில்லாமல், ஐபிஎல் தொடர்களில் மிகச் சிறந்த அணியான சென்னை சூப்பர் கிங்ஸ், இந்த முறை கடும் தடுமாற்றம் கண்ட நிலையில், இந்த போட்டியில் கிடைத்த வெற்றி, அந்த அணிக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அளித்துள்ளது.

இது அனைத்தையும் விட சிறப்பம்சமாக, இதுவரை பார்முக்கு வராமல் இருந்த சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் வாட்சன், இன்றைய போட்டியில் அதிரடியாக ஆடி ரன்கள் குவித்தார். விக்கெட் எதுவும் இழக்காமல் சாதனை வெற்றி பெற்று அசத்தியுள்ளது வாட்சன் - டு பிளஸி ஜோடி.

சென்னை அணியின் இந்த வெற்றியால், சிஎஸ்கே ரசிகர்கள் கடும் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர். இந்த வெற்றியின் மூலம் சிஎஸ்கே அணி புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்