"நம்ம 'சிஎஸ்கே' 'டீம்'குள்ள என்ன தான் பிரச்சன??..." பரபரப்பை உண்டு பண்ணிய 'சென்னை' வீரரின் 'ட்வீட்'... கலக்கத்தில் 'ரசிகர்'கள்!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இதுவரை இல்லாத அளவிற்கு தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் மிக மோசமாக அமைந்துள்ளது.

ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே, சென்னை அணியின் நட்சத்திர வீரர்களான சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் தங்களின் தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து, தங்களது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்திய போதும், அதன்பிறகு தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவியது.

இதுவரை 6 போட்டிகளில் இரண்டில் மட்டுமே சென்னை அணி வெற்றி கண்டுள்ள நிலையில், மீதமுள்ள 8 போட்டிகளில் 6 போட்டிகளிலாவது வென்று ஆக வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி உள்ளது.

 

இந்நிலையில், சென்னை அணியில் இடம்பெற்றுள்ள வேகப்பந்து வீச்சாளரான லுங்கி நெகிடி (Lungi Ngidi), தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அதில், 'There’s a lot of bad things that they wishing on me' என குறிப்பிட்டிருந்தார். இது சென்னை அணியை மறைமுகமாக கூறியதா என ரசிகர்களிடையே கேள்வி எழுந்த நிலையில், அதனை உறுதியாக்கும் வகையில் செயல் ஒன்றையும் லுங்கி நெகிடி செய்துள்ளார்.

 


அதாவது, நெகிடியின் பதிவின் கீழ் ரசிகர் ஒருவர், 'நீங்கள் வேறு ஐபிஎல் அணிக்கு தகுதியானவர்' என கமெண்ட் செய்திருந்தார். அதற்கு நெகிடியும் லைக் செய்துள்ளார். ஏற்கனவே சிஎஸ்கே அணிக்குள் என்ன குழப்பம் நீடித்து வருகிறது என்பது ரசிகர்களுக்கு மிகப் பெரிய புதிராக உள்ள நிலையில், தற்போது நெகிடியின் இந்த செயலும் ரசிகர்களிடம் இன்னும் கேள்வியை அதிகப்படுத்தியுள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்