"'தல' சொன்னது கரெக்ட் தான் போல... ஓவரா 'கிண்டல்' பண்ணிட்டமோ??.... திடீரென ட்விட்டரில் 'டிரெண்ட்' ஆகும் 'தோனி' சொன்ன 'வார்த்தை'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் போட்டியில் சென்னை அணி 7 விக்கெட்டுகளை இழந்து தவித்து வருகிறது.

சென்னை அணியில் இளம் வீரர்களுக்கு சரியாக வாய்ப்புகள் கொடுக்கவில்லை என தொடர்ந்து தோனி மீது குற்றச்சாட்டு இருந்து வந்தது. அது மட்டுமில்லாமல் பார்மில் இல்லாத ஜாதாவிற்கு தோனி தொடர்ந்து வாய்ப்பளித்து வந்தார். இதற்கு முந்தைய போட்டியின் முடிவுக்கு பின்னர் சிஎஸ்கே கேப்டன் தோனி, அணியிலுள்ள இளம் வீரர்களிடம் ஒரு உத்வேகத்தை (spark) காண முடியவில்லை, அதன் காரணமாக அவர்களுக்கு அதிகம் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை' என தெரிவித்திருந்தார்.

இந்த கருத்து மிகப் பெரும் பரபரப்பை உண்டு பண்ணியிருந்த நிலையில், பலர் தோனிக்கு எதிராகவும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இளம் வீரர்களுக்கு வாய்ப்பே அளிக்காமல், அது எப்படி அவர்களிடம் வேகத்தை காணவில்லை என தெரிவிக்கலாம் என்ற கேள்வியை தோனி முன் வைத்தனர்.

இந்நிலையில், மும்பை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இளம் வீரர்களான கெயிக்வாட், ஜெகதீசன் ஆகியோருக்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் இருவரும், ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினர். கெயிக்வாட் இந்த சீசனில் இதுவரை ஆடியுள்ள 3 போட்டிகளில் இரண்டு முறை ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறியுள்ளார்.  





 

இதனால், கடந்த போட்டியின் இறுதியில் தோனி சொன்னது சரி தானோ என ரசிகர்கள் தோனிக்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் #Spark என்ற ஹேஸ்டேக் பயன்படுத்தி ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

இன்னொரு பக்கம் சீனியர் வீரர்கள் கூட இந்த போட்டியில் சிறப்பாக ஆடவில்லை, அதனால் இளம் வீரர்களை மட்டும் எப்படி சில போட்டிகளின் முடிவை வைத்தே குற்றம் கூறுவது என்றும் சிலர் தெரிவித்து வருகின்றனர்.











 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்