VIDEO: இதை யாருமே எதிர்பார்க்கலயே.. மேட்ச் முடிஞ்ச கையோட ‘வேறலெவல்’ சம்பவம் பண்ணிய சிஎஸ்கே வீரர்.. டாப் டிரெண்டிங்கே இதுதான்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சிஎஸ்கே வீரர் மைதானத்தில் இளம்பெண் ஒருவரிடம் காதலை வெளிப்படுத்திய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி இன்று (07.10.2021) துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 134 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக டு பிளசிஸ் 76 ரன்கள் எடுத்தார்.

பஞ்சாப் அணியைப் பொறுத்தவரை கிறிஸ் ஜோர்டன் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், முகமது ஷமி மற்றும் மோயிஸ் ஹென்ரிக்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 13 ஓவர்களில் 139 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக கேப்டன் கே.எல்.ராகுல் 98 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அசத்தினார்.

இந்த நிலையில், இப்போட்டி முடிந்ததும், சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் (Deepak Chahar), இளம்பெண் ஒருவரிடம் காதலை வெளிப்படுத்தினார். உடனே அப்பெண்ணும் சம்மதம் தெரிவிக்கவே இருவரும் அங்கேயே மோதிரம் மாற்றி நிச்சயம் செய்து கொண்டனர்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்