கவலைப்படாதீங்க.. அதான் ‘தல’ தோனி இருக்கார்ல..‘ப்ளே ஆஃப்’-க்கு போயிறலாம்.. ரொம்ப கான்பிடன்ட்டா சொன்ன ‘அந்த’ வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கேப்டன் தோனி இருப்பதால் சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பு உள்ளதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் அணிக்கு எதிராக நேற்று நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை அணி படுதோல்வியை சந்தித்தது. இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 3-ல் மட்டுமே வெற்றி பெற்றிருப்பதால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு சென்னை அணிக்கு குறைந்துள்ளது.

இந்த நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான், ‘யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் மீண்டுவிடலாம். சிஎஸ்கே இப்போது கடைசி இடத்தில் இருப்பதற்காக வருத்தப்பட தேவையில்லை. சரியான திட்டமிடல் இருந்தால் மீண்டும் வெற்றி பெற முடியும்.

அந்த அணிக்காக நான் 2015-ம் ஆண்டு விளையாடியுள்ளேன். சிஎஸ்கேவுக்கு வீரர்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது நன்றாகவே தெரியும். ஆனால் இவை அனைத்தும் வீரர்களின் கையில்தான் உள்ளது. இத்தனை ஆண்டுகளாக சிஎஸ்கே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

இப்போது அணியில் ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோர் இல்லாதது பின்னடைவுதான். ஆனால் சிஎஸ்கேவுக்கு சிறந்த கேப்டனாக தோனி இருக்கிறார். அணி இப்போது இருக்கும் நிலையிலிருந்து முன்னோக்கி எடுத்துச் செல்ல தோனியால் முடியும். சிஎஸ்கேவின் பெரிய பலமே அவர்தான்’ என இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்