மீண்டும் தொடங்கும் ஐபிஎல் தொடர்...! ஃபர்ஸ்ட் மேட்ச்ல 'சிஸ்கே' கூட 'யாரு' மோதுறாங்க...? - முழு போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவின் நடந்து வந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் ஐபிஎல் ரசிகர்கள் கடும் அதிருப்தியடைந்தனர்.

இதன் பின்பு, ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டிகள் நடைபெறும் என ஏற்கனவே தகவல் வெளியானது. மேலும், அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.

செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் அக்டோபர் 15-ஆம் தேதி வரை ஐபிஎல் போட்டிகளை நடத்தி முடித்துவிடலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போட்டிகள் நடக்கும் தேதி குறித்த அட்டவணை வெளியாகியுள்ளது. இதில் முதல் போட்டி செப்டம்பர் 19-ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மோத உள்ளது.

இந்த தொடரில் ஏற்கனவே நடந்த முதல் லீக் ஆட்டத்தில் சென்னை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வீழ்த்தியிருந்தது. எனவே வெறித்தனமான ரசிகர்கள் கொண்ட இந்த அணிகள் மோதும் போட்டியோடு ஐபிஎல்-ன் இரண்டாவது பாதி தொடங்கவிருப்பது ரசிகர்களிடையே பயங்கர எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரையிறுதிப் போட்டிகள் அக்டோபர் 10, 11 மற்றும் 13-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. அக்டோபர் 15-ஆம் தேதி இறுதிப்போட்டி துபாயில் நடைபெறும் எனவும் அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்