காயத்தால் வெளியேறிய முகேஷ் சவுத்ரி.. CSK குடும்பத்தில் இணைந்த இளம் வீரர்.. யாருப்பா இந்த ஆகாஷ் சிங்..?!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் புதிதாக இணைந்திருக்கிறார் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் சிங். இதனை அந்த அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

ஐபிஎல் 2023

கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது ஐபிஎல் தொடர். கடந்த வருடத்திலிருந்து பத்து அணிகள் இந்த தொடரில் பங்கேற்று வருகின்றன. அதன்படி சில தினங்களுக்கு முன்னர் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் அட்டவணை வெளியிடப்பட்டது. மார்ச் 31ஆம் தேதி துவங்கி டிசம்பர் 28 ஆம் தேதி வரை இந்தியாவில் இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாட இருக்கிறது.

Images are subject to © copyright to their respective owners.

கடந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் லீக் தொடரிலேயே வெளியேறி இருந்தது. ஆகவே, இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றவேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

காயம்

இந்நிலையில் ஐபிஎல் தொடரின் முக்கிய வீரர்கள் சிலர் காயம் காரணமாக இந்த ஆண்டு தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என தகவல்கள் வெளியாகி வந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கெய்ல் ஜெமிசன் விலகிய நிலையில் அவருக்கு பதிலாக மாற்று வீரராக தென்னாப்பிரிக்காவின் சிசாண்டா மஹாலாவை CSK அணி தேர்வு செய்துள்ளது. அதே நேரத்தில் CSK-வின் முகேஷ் சவுத்ரியும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

இந்த சூழ்நிலையில் வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் சிங் CSK அணியில் இணைந்திருக்கிறார். 2020 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இந்திய அணியில் ஆகாஷ் இடம்பெற்றார். அவர் 6 போட்டிகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணியில் அவர் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

 

CSK, IPL, AKASH SINGH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்