என்னங்க கிரவுண்ட்ல படுத்துட்டாங்க.. மேட்சுக்கு நடுவே நடந்த சுவாரஸ்யம்.. வைரல் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்தில் நடைபெற்ற கவுண்டி கிரிக்கெட் போட்டியின் போது தேனீக்கள் மைதானத்தில் புகுந்ததால் ஆட்டம் சிறிதுநேரம் தடைபட்டது. இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | அரசுப் பேருந்துகளில் கட்டண உயர்வா?.. அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட விளக்கம்..!

கவுண்டி கிரிக்கெட்

புகழ்பெற்ற கவுண்டி சேம்பியன்ஷிப் 2022 போட்டிகள் கடந்த ஏப்ரல் மாதம் இங்கிலாந்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. டிவிஷன் 2 வில் மொத்தம் 8 அணிகள் மோதும் இந்தப் போட்டிகள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய இடங்களில் உள்ள மைதானங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லீசெஸ்டர்ஷயர் மற்றும் சசெக்ஸ் அணிகள் மோதிய போட்டியில் வித்தியாசமான சம்பவம் ஒன்று நடைபெற்றது. இதனால் வீரர்கள் மைதானத்திலேயே படுத்துவிட்டனர். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

படையெடுத்த தேனீக்கள்

லீசெஸ்டர்ஷயர் மற்றும் சசெக்ஸ் இடையேயான போட்டியில், நேற்று லீசெஸ்டர்ஷயர் அணி தனது இரண்டாவது இன்னிக்ஸை தொடர்ந்தது. ஹாரி ஸ்விண்டெல்ஸ் மற்றும் கேலம் பார்கின்சன் ஆகியோர் பேட்டிங் செய்துகொண்டிருந்த போது, திடீரென மைதானத்திற்குள் தேனீக்கள் படையெடுத்தன. இதனால், அதிர்ச்சியடைந்த வீரர்கள் அப்படியே மைதானத்தில் படுத்துவிட்டனர். தேனீக்கள் பறந்து செல்லும் வரையில் வீரர்கள் மைதானத்திலேயே படுத்திருந்த வீடியோ தான் இப்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாக இருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணி வீரரான சத்தீஸ்வர் புஜாரா, சசெக்ஸ் அணிக்காக கவுண்டி சேம்பியன்ஷிப் போட்டியில் விளையாடிவருவது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து லீசெஸ்டர்ஷயர் கவுண்டி கிரிக்கெட் க்ளப் தனது ட்விட்டர் பக்கத்தில்," மேட்ச் தடைபட மழையோ, போதிய வெளிச்சம் இல்லாததோ காரணமல்ல. இதற்கெல்லாம் காரணம் தேனீக்கள் தான். தேனீக்கள் கூட்டம் வீரர்கள் மற்றும் நடுவர்களை மைதானத்தில் படுக்கும்படி செய்துவிட்டது" எனக் குறிப்பிட்டுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் கவுண்டி கிரிக்கெட் போட்டியின்போது, தேனீக்கள் படையெடுத்ததால் ஆட்டம் தடைபட்ட வீடியோ கிரிக்கெட் ரசிகர்களால் சமூக வலை தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

 

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

CRICKET, COUNTY CRICKET, BEES SURROUNDING PITCH, COUNTY CRICKET STOPS, கவுண்டி கிரிக்கெட், தேனீக்கள்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்