”சூரத்தில் பிராக்டிஸ்".. அட்டகாசமான புது லுக்கில் தல தோனியின் வைரல் புகைப்படம்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி சூரத்தில் ஐபிஎல் தொடருக்கான பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.

Advertising
>
Advertising

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே:

இந்திய அணி கண்ட தலைச் சிறந்த கேப்டன்களில் ஒருவர் எம்.எஸ். தோனி. இவரது தலைமையில் ஆடிய இந்திய அணி, டி 20 மற்றும் 50 ஓவர் உலக கோப்பை உள்ளிட்ட பல கோப்பைகளை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது. சர்வதேச போட்டியில் இருந்து தோனி ஓய்வு பெற்றாலும், ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக களமிறங்கி, தலைமையும் தாங்கி வருகிறார். கொரோனா காரணமாக இந்த ஆண்டு சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடக்கவில்லை.

சென்னை சூப்பர் கிங்ஸ்:

தோனி தலைமையில் சி எஸ் கே அணி இதுவரை நான்கு முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது . அதுபோல ஒரு முறை தவிர்த்து மற்ற எல்லா முறையும் ப்ளே ஆஃப் சுற்றுகளுக்கு சென்றுள்ளது.  ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் தலை சிறந்த அணிகளில் ஒன்றாக சிஎஸ்கே வை 12 ஆண்டுகள் தோனி வழிநடத்தியுள்ளார். கடந்த ஆண்டு சிஎஸ்கே அணி பட்டம் வென்ற நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவில் நடக்க உள்ளது. தோனி கடந்த ஆண்டோடு ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றுவிடுவார் என ஆருடங்கள் சொல்லப்பட்ட நிலையில் மீண்டும் அவரை தக்கவைத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது சிஎஸ்கே நிர்வாகம்.

சிஎஸ்கேவில் தோனி & ஜடேஜா

இந்த மாத இறுதியில் இந்தியாவில் 15 ஆவது ஐபிஎல் தொடர் தொடங்க உள்ளது. இந்நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி மீண்டும் விளையாடுவதை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர். ஐபிஎல் 2022 ஏலத்திற்கு முன்னதாக, எம்எஸ். தோனியை 12 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே தக்க வைத்துக் கொண்டது. ரவீந்திர ஜடேஜாவை 16 கோடிக்கு சிஎஸ்கே தக்கவைத்தது.  தோனியை விட சென்னை சூப்பர் கிங்ஸ் வரலாற்றில் அதிக விலைக்கு மற்ற வீரர் தக்கவைக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.  இதனால் தோனிக்குப் பிறகு அணியை ஜடேஜா தலைமை தாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

சூரத்தில் தல தோனி :

இந்நிலையில் ஐபிஎல் போட்டித் தொடர் நெருங்கி வரும் நிலையில் இந்திய அணியில் இடம்பெறாத வீரர்கள் பயிற்சியை தொடங்கியுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் தோனி தலைமையில் சூரத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது சம்மந்தமாக சிஎஸ்கே அணியின் சமூகவலைதளப் பக்கத்தில் தோனி மஞ்சள் உடையில், சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் பயிற்சியில் ஈடுபடும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் கேப்ஷனாக ‘சூரத்தில் சிங்கம் பயிற்சியில் இருக்கிறது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தோனியின் இந்த புகைபப்டம் சி எஸ் கே ரசிகளின் கவனத்தை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

MSDHONI, CSK, IPL2022, DHONI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்