Watch Video: 'தம்பி' அது போன தடவ.. 'முகத்தை' மூடிக்கொண்ட முத்துச்சாமி.. வச்சு 'செஞ்ச' கிங் கோலி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 601 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்த ஆட்டத்தில் கேப்டன் விராட் கோலி கடைசிவரை அவுட் ஆகாமல் 254 ரன்கள் குவித்து தனது முந்தைய சாதனையான 243 ரன்கள் சாதனையை தானே தகர்த்தார். மேலும் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 7 இரட்டை சதங்களை குவித்து அதிலும் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார்.

 

இன்றைய போட்டியில் கோலி 202 ரன்களில் இருந்தபோது முத்துச்சாமி வீசிய பந்தில் அவுட்டானார். இதனால் முத்துச்சாமி உற்சாகமாக, கோலி அதிர்ச்சி அடைந்தார். ஏனெனில் போன முறையும் முத்துச்சாமி பந்து வீச்சில் தான் கோலி அவுட் ஆகி இருந்தார்.ஆனால் ரீ-பிளேயில் அது நோ பால் என தெரியவந்தது. நோ பால் என தெரிந்தவுடன் கோலி சிரிக்க, முத்துச்சாமி தனது முகத்தை டீஷர்ட்டால் மூடிக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து 254* ரன்கள் குவித்த கோலியை யாராலும் அவுட் ஆக்க முடியவில்லை. இதன் மூலம் தனது முந்தைய சாதனையை கோலி தானே தகர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்