'இங்கிலாந்துக்கு எதிரான வெற்றி'... 'ஒற்றை பதிவில் நெகிழ வைத்த சஞ்சனா'... கொண்டாடி தீர்த்த ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், இந்தியா வெற்றி பெற்றது.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 157 ரன்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குறிப்பாக இப்போட்டியில், இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிக் கொண்டிருந்த போது, அந்த அணியின்  முக்கிய விக்கெட்டுகளான ஆலி போப் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ்வை பும்ரா தன்னுடைய அசுரவேகத்தின் மூலம் போல்டாக்கி வெளியேற்றினார்.

இந்த விக்கெட்கள் இந்திய அணிக்கு பெரும் திருப்பு முனையாக அமைந்தது. இந்நிலையில், பும்ராவின் மனைவி சஞ்சனா கணேசன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பும்ரா விக்கெட் எடுத்த புகைப்படத்தைப் பதிவிட்டு, உன்னை நினைத்து இன்று மற்றும் என்றென்றும் பெருமைப்படுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் பும்ராவின் மனைவி சஞ்சனாவை புகழ்ந்து வருகிறார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்