'இன்னும் 4 விக்கெட் எடுத்தா போதும்...' 'அவரோட' ரெக்கார்ட பிரேக் பண்ணிடலாம்...! - அப்புறம் பிராவோ தான் நம்பர் 1...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொரோனா வைரஸினால் ஒத்திவைக்கப்பட்ட 13-வது ஐபிஎல் தொடர் நாளை அமீரகத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை அணி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முன்னணி அணிகளாக உள்ள இரு அணிகள் மோதுவதால் இப்போட்டி குறித்தான எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது.

தோனியின் ஓய்வு அறிவிப்பிற்கு பின் அவர் ஆடவிருக்கும் முதல் போட்டி என்பதாலும் ரசிகர்கள் கூடுதல் உற்சாகத்தில் உள்ளனர்.

மேலும் இந்த தொடரில் சென்னை அணியின் நட்சத்திர வீரர் பிராவோ, சென்னை அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையைப் படைப்பதற்கான வாய்ப்பும் உள்ளது.  இதுவரை சென்னை அணிக்காக விளையாடி, அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனை அஸ்வின் வைத்துள்ளார். அவர் சென்னை அணிக்காக 120 போட்டிகளில் விளையாடி மொத்தம் 121 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதே வேளையில் தற்போது சென்னை அணியில் விளையாடி வரும் பிராவோ, 103 போட்டிகளில் விளையாடி மொத்தம் 118 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இன்னும் 3 விக்கெட்டுகள் மட்டுமே தேவை என்ற நிலை உள்ளதால் முதல் ஒரு சில போட்டிகளிலேயே இச்சாதனை முறியடிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்