VIDEO: கைக்கு வந்த வாய்ப்பை இப்டியா ‘மிஸ்’ பண்ணுவீங்க.. கடுப்பான கோலி.. வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கைக்கு வந்த கேட்ச்சை ரோஹித் ஷர்மா தவறவிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 578 ரன்களை குவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 218 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 82 ரன்களும் மற்றும் டாம் சிம்லே 87 ரன்களும் எடுத்தனர்.

இந்த இன்னிங்ஸில் இந்திய அணி 4 கேட்ச்களை நழுவவிட்டது. அதில் 3 கேட்ச் வாய்ப்புகள் கொஞ்சம் கடினமான வாய்ப்புகளாக இருந்தன. ஆனால், ரோஹித் ஷர்மா கைக்கு வந்த சுலமான கேட்ச் ஒன்றை தவறவிட்டார். வாசிங்டன் சுந்தர் வீசிய 175 ஓவரின் முதல் பந்தை இங்கிலாந்து பேட்ஸ்மேன் டாம் பெஸ் எதிர்கொண்டார். அவர் மிட் விக்கெட் திசையில் அந்த பந்தை அடித்தார். அந்த திசையில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த ரோஹித் ஷர்மாவிடம் பந்து பறந்து சென்றது.

நேராக கைக்கு வந்த பந்தை ரோஹித் ஷர்மா நழுவவிட்டார். இதை கேலரியில் அமர்ந்து போட்டியைப் பார்த்துக்கொண்டிருந்த இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ‘ஷாக்’ ரியாக்‌ஷன் கொடுத்திருந்தார். கேப்டன் விராட் கோலி கோபத்தில் ரோஹித்தை முறைத்துப் பார்த்துவிட்டு அமைதியாக சென்றுவிட்டார். இங்கிலாந்து அணி 500 ரன்களை கடந்து சென்றுகொண்டிருந்த நிலையில், இந்திய வீரர்கள் பல கேட்களை தவறவிட்டது ரசிகர்கள் மத்தியில் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ட்விட்டரில், ‘இது மாதிரியான சுலப கேட்ச்களை நழுவ விடுவது கஷ்டமாக இருக்கிறது’ என ரசிகர் ஒருவர் ரோஹித் ஷர்மா கேட்ச்சை தவறவிட்ட் வீடியோவை பதிவிட்டு இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்