‘சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும்’... ‘நடக்கப் போகும் டி20 உலகக் கோப்பை போட்டி’... ‘வெளியான தகவல்’...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

2021 ஆம் ஆண்டு இந்தியாவில் நடக்க உள்ள டி20 உலகக் கோப்பை போட்டியில் சில போட்டிகள் சென்னையில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொரோனா காரணமாக முடங்கியிருந்த கிரிக்கெட் போட்டிகள், சில நாடுகளில் தற்போது பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.  இதேபோல் இந்திய அணியும்  தாமதமாக ஐபிஎல் போட்டியில் கலந்துகொண்ட நிலையில், ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது.

இதனால் அடுத்த ஆண்டு, அதிகளவில் போட்டிகள் நடத்த உத்தேசமிட்டுள்ளதால், இந்திய அணி தொடர்ச்சியாக போட்டிகளில் கலந்துகொண்டு பரபரப்பாக இயங்க வேண்டிய தருணத்தில் உள்ளது. இந்நிலையில், டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரும் அடுத்த வருடம் நடக்க உள்ளது. இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடக்க வேண்டிய டி 20 உலகக் கோப்பை கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு அடுத்த வருடம் இந்தியாவில் நடக்க உள்ளது.

அடுத்த வருடம் நடக்க உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஏற்பாடுகளை பிசிசிஐ இப்போதே செய்ய தொடங்கிவிட்டது. இதற்காக பிசிசிஐ அமைப்பில் இரண்டு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு குழு இந்திய அணி வீரர்களை தேர்வு செய்யும். இதற்கான பணிகள் நடந்து வருகிறது.

இன்னொரு குழு இந்திய மைதானத்தில் எங்கெல்லாம் போட்டிகள் நடக்கும் என்பதை தீர்மானிக்கும். இதில் இந்திய அணி எந்த மைதானத்தில் எல்லாம் ஆடும் என்றும் ஆலோசனை செய்யப்படும். இந்த நிலையில் இந்தியாவில் எந்த மைதானத்தில் எல்லாம் இந்த டி 20உலகக் கோப்பை நடக்கும் என்று முதல் கட்ட விவரங்கள் வெளியாகி உள்ளது.

அதன்படி அஹமதாபாத், பெங்களூர், சென்னை, டெல்லி, மொஹல், தர்மசாலா, கொல்கத்தா, மும்பை, ஆகிய மைதானங்களில் இந்த கிரிக்கெட் தொடர் நடக்க உள்ளது. சென்னையில் இந்த தொடரின் 2-3 போட்டிகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வருடம் அக்டோபர் மாதத்தில் இந்த தொடர் நடக்க உள்ளது. அகமதாபாத்தில் நாளை நடக்க உள்ள கிரிக்கெட் நிர்வாகக் குழு கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதித்து, இறுதி பட்டியலுக்கு ஒப்புதல் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்