"அப்படி பேசாதீங்க"... "ஆனா அந்த மாதிரி யாராவது சொல்லும்போது"... கோலி பற்றிய ரகசியம்!.. போட்டு உடைத்த பாபர் அசாம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கேப்டன் விராட் கோலி குறித்து பாகிஸ்தான் அணியின் இளம் பேட்ஸ்மேனும் கேப்டனுமான பாபர் அசாம் முக்கிய கருத்தை தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான பாபர் அசாம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தற்போதைய கிரிக்கெட் உலகில், பாபர் அசாம் மற்றும் விராட் கோலி ஆகியோரின் பேட்டிங் திறமை சர்வதேச அளவில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. அவர்களின் ரெக்கார்டுகள் ரசிகர்களை வியப்படைய வைக்கிறது. இந்நிலையில், விராட் கோலியையும், பாபர் அசாமையும் ஒப்பிட்டு இணையத்தில் அடிக்கடி விவாதங்கள் நடைபெறும்.

இது குறித்து பேட்டியளித்துள்ள பாபர் அசாம், "உலகின் தலை சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் விராட் கோலி. அவர் கிரிக்கெட் உலகின் அனைத்து நிலைகளிலும் சாதித்திருக்கிறார். பலரும் என்னை அவருடன் ஒப்பிடும்போது பெருமையாக இருக்கும். ஏனெனில், அவர் ஒரு மிகப்பெரிய வீரர். ஆனால் தனிப்பட்ட முறையில் என்னை கேட்டீர்கள் என்றால், ஒருவரை ஒருவர் எப்போதும் ஒப்பீடு செய்யக் கூடாது என்பதே எனது கருத்து" என்று கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், "ஆனால் அப்படி ஒப்பிட்டு பேசுவது சிலருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. என்னை பொறுத்தவரை நன்றாக விளையாடி அணியை வெற்றிப்பெற செய்ய வேண்டும். அதுவே என் முதல் நோக்கமாக இருக்கும். அந்த வெற்றியினால் பாகிஸ்தானுக்கு பெருமை தேடி தர வேண்டும். எனக்கென்று பேட்டிங்கில் ஒரு பாணி இருக்கிறது. அதேபோல விராட் கோலியின் பாணி வேறு" என்றார்.

தொடர்ந்து பேசிய பாபர் அசாம், "பல முன்னணி கிரிக்கெட் வீரர்களிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டு இருக்கிறேன். எவராலும் ஒரே மாதிரியாக நீண்ட காலம் விளையாட முடியாது. எல்லா நேரத்திலும் நாம் கிரிக்கெட்டில் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். நானும் அப்படிதான். இந்தத் திறமையை நான் இப்படியே பயன்படுத்திக்கொண்டு என்னுடைய விளையாட்டில் தொடர்ந்து கவனம் செலுத்துவேன்" என்று தெரிவித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்