என்னங்க சொல்றீங்க..! இது உண்மையா..? இணையத்தில் ‘தீயாய்’ பரவும் தகவல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி சிஎஸ்கே அணி கோப்பையை கைப்பற்றியது.

ஐபிஎல் (IPL) தொடரின் இறுதிப்போட்டி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் தோனி (Dhoni) தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (KKR) அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி, 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்களை எடுத்தது.

இதனை அடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 27 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இதன்மூலம் 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று சென்னை அணி அசத்தியுள்ளது.

இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியின் மனைவி சாக்‌ஷி (Sakshi) கர்ப்பமாக உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இதனை சுரேஷ் ரெய்னாவின் (Suresh Raina) மனைவி பிரியங்கா (Priyanka) கூறியதாக கூறப்படுகிறது. ஆனாலும் இதுகுறித்த எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

கடந்த 2010-ம் ஆண்டு காதலி சாக்‌ஷியை தோனி திருமணம் செய்தார். இவர்கள் இருவருக்கும் 2015-ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் பெயர் ஜிவா என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்