"ப்ளீஸ்.. நேரம் வரும்போது நாங்களே 'கண்டண்ட்' கொடுப்போம்!.. இத மட்டும் பண்ணாதீங்க!"... கோலி வைத்த ‘கோரிக்கை!’

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி தம்பதியர் இந்தியாவின் பிரபலமான கணவன் மனைவி. இவர்கள் இருவருக்குமான முதல் குழந்தை பிறப்பை ஜனவரி 2021ல் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

முன்னதாக கோலி ஐபிஎல் போட்டிக்காக துபாய் சென்றிருந்தபோது அனுஷ்கா ஷர்மா கர்ப்பமாக இருக்கும் செய்தியை தெரிவித்தார். பின்னர் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்த விராட், அனுஷ்காவுக்கு குழந்தை பிறக்க இருப்பதாகக் கூறி, முதல் டெஸ்ட் முடிந்து பின், இந்தியா திரும்பினார். இந்நிலையில் தான் கோலி - அனுஷ்கா ஷர்மா தம்பதிக்கு ஜனவரி 11-ஆம் தேதி அன்று பெண் குழந்தை பிறந்துள்ளது.

 

இதுபற்றி இன்ஸ்டாகிராமில் தெளிவுபடுத்திய கோலி, தாயும் சேயும் நலமாக இருப்பதாக தெரிவித்தார். அத்துடன், “வாழ்வின் புதிய அத்தியாத்தை ஆரம்பிக்க ஆசீர்வதிக்கப் பட்டிருக்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார். 

இதனிடையே மும்பையில் உள்ள paparazzi fraternityக்கு கோலி - அனுஷ்கா தம்பதியினர் கோரிக்கை ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில் “எங்கள் தனியுரிமையை மதிப்பீர்கள் என நம்புகிறோம். நாங்கள் எங்கள் குழந்தையின் தனியுரிமையை பாதுகாக்க விரும்புகிறோம், அதற்கு உங்கள் ஆதரவும் தேவை” என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

மேலும் பாப்பராசிக்கு (paparazzi) தேவையான கன்டன்ட்டை குறித்த நேரத்தில் ஷேர் செய்வோம் என்றும் கோலி உறுதி அளித்துள்ளார். ஆனாலும்  “உங்களுக்குத் தேவையான கண்டன்களை நாங்களே தருவோம். குழந்தை பற்றிய எந்த ஒரு கண்டண்டையும் வெளியிட வேண்டாம். போட்டோ எடுக்கவும் வேண்டாம்” என்று அவர் கேட்டுக் கொண்டார்.

ALSO READ: “அப்படி பேசுன நானே ஏன் புகார் கொடுத்தேன்னா”.. “என்ன மாரி நிறைய பொண்ணுங்க குமுறிட்டு இருக்காங்க.. பெரிய லிஸ்டே இருக்கு!”.. 'YouTube' வைரல் பெண் 'கண்ணீர்' பேட்டி! வீடியோ!

எங்களை பற்றி நன்றாகவே தெரிந்த உங்களுக்கு நாங்கள் சொல்ல வருவது புரியும் என்று கூறிய கோலி, இதுநாள் வரை நீங்கள் காட்டிய அன்பிற்கு நன்றி,  இனியும் உங்களனைவர் அன்பும் தொடர விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார். இத்தம்பதியர், சமீபத்தில் தான் தங்களது மூன்றாவது திருமண ஆண்டு விழாவை கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்