விடுஞ்சா ஐபிஎல் ஏலம்.. திடீர்னு விலகிய பஞ்சாப் அணியின் முக்கிய நபர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கே.எல்.ராகுலை தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருந்து மற்றொரு முக்கிய நபரும் விலகியுள்ளார்.

Advertising
>
Advertising

ஐபிஎல் தொடரின் 15-வது சீசனுக்கான வேலை மும்முரமாக நடைபெற்று வருகிறது. பெங்களூரில் நாளை (12.02.2022) ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக அனைத்து அணிகளும் தங்கள் அணியில் விளையாடிய 4 வீரர்களை தக்க வைத்துள்ளன. அதில் பஞ்சாப் கிங்ஸ் அணி, மயங்க் அகர்வால் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய 2 வீரர்களை மட்டுமே தக்க வைத்துள்ளது. அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த கே.எல்.ராகுல் ஏலத்துக்கு செல்ல விருப்பம் தெரிவித்தார். இதனை அடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணி அவரை விடுவித்தது.

தற்போது புதிதாக இணைக்கப்பட்டுள்ள லக்னோ அணி, கே.எல்.ராகுலை எடுத்துள்ளது. மேலும் அணியின் கேப்டன் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு சமீபத்தில் ‘லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்’ பெயர் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் பஞ்சாப் அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த வாசிம் ஜாபர், தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் வாசிம் ஜாபர் அறிவித்துள்ளார். முன்னதாக நட்சத்திர வீரரான கே.எல்.ராகுல் அணியில் இருந்து விலகினார். ஐபிஎல் ஏலம் நடைபெற இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில் பேட்டிங் பயிற்சியாளர் விலகியது பஞ்சாப் அணியின் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

IPL, PUNJAB KINGS, IPLAUCTION2022, WASIMJAFFER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்