"ஒவ்வொரு IPL பிளேயருக்கும் CSK-ல இருக்கணும்ங்கறது கனவு".. ரஹானே உருக்கம்.. வீடியோ,!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் ரஹானே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பற்றி உருக்கமாக பேசியிருக்கிறார்.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | அந்த சிம்ப்ளிசிட்டி தான்.. பிரபல ரஜினி பாடல் பின்னணியில் ஒலிக்க என்ட்ரி கொடுத்த தோனி.. CSK அணி பகிர்ந்த வீடியோ..!

ஐபிஎல் 2023

கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது ஐபிஎல் தொடர். கடந்த வருடத்திலிருந்து பத்து அணிகள் இந்த தொடரில் பங்கேற்று வருகின்றன. அதன்படி சில தினங்களுக்கு முன்னர் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் அட்டவணை வெளியிடப்பட்டது. மார்ச் 31ஆம் தேதி துவங்கி டிசம்பர் 28ஆம் தேதி வரை இந்தியாவில் இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாட இருக்கிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு சென்னையில் போட்டி நடைபெற உள்ளதால் ரசிகர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

ரஹானே

இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேனான ரஹானே கடந்த 2011 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் தொடரில் ஆறுமுகம் ஆனார். பின்னர் 2013 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆறுமுகம் ஆன ரஹானே கடினமான சூழ்நிலையிலும் தாக்குப் பிடித்து அணியை வழிநடத்துபவர்.

Images are subject to © copyright to their respective owners.

இதுவரையில் 82 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரஹானே 4931 ரன்களையும் 90 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2962 ரன்களையும் 20 டி20 போட்டிகளில் விளையாடி 375 ரன்களையும் எடுத்திருக்கிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் ரஹானேவை ஏலத்தில் எடுத்திருந்தது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அபாரமாக ஆடி பல சரித்திர இன்னிங்க்ஸை கொடுத்த ரஹானே ஐபிஎல் தொடரில் பல இடங்களில் அவருக்கான வாய்ப்பு கிடைக்காமலேயே இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் ரஹானேவிற்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பது குறித்து ரசிகர்கள் இப்போதே பேசி வருகின்றனர்.

Images are subject to © copyright to their respective owners.

உருக்கம்

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளது. அதில் பேசும் ரஹானே,"CSK குடும்பத்தின் ஒரு உறுப்பினராக இருப்பது  பெருமகிழ்ச்சியையும் ஆர்வத்தையும் அளிக்கிறது. அணி நிர்வாகத்திற்கு நான் நன்றி கூற விரும்புகிறேன். ஐபிஎல் தொடரில் விளையாடும் ஒவ்வொரு வீரரும் சென்னை அணிக்காக விளையாட வேண்டும் எனவும் CSK குடும்பத்தின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என கூறுவதை நான் கேட்டிருக்கிறேன். எனக்கான இந்த வாய்ப்புக்காக நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். உறக்கத்தில் இருந்து எழுந்த போது, நான் சென்னை அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டதை எனது மனைவி தெரிவித்தார். அப்போது நான் பெரும் மகிழ்ச்சி அடைந்தேன்" என்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Also Read | ஆஸ்கரை தட்டி தூக்கிய இந்திய கலைஞர்கள்.. ஜெய்ஹோ சொல்லி வாழ்த்திய இசைப்புயல்.. வைரலாகும் போஸ்ட்..!

CRICKET, AJINKYA RAHANE, AJINKYA RAHANE EMOTIONAL SPEECH, CSK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்