துபாய் வாசகர் கதை : ஆஹா.. 'VTV' கார்த்தி & ஜெஸ்ஸிக்கு இது தோணாம போய்ருச்சே.. ஒரே ஒரு‌ பொய்யில் ஒன்று சேர்ந்த ஜோடி.. செம LOVE-ப்பா

முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்
By |

துபாய்ல விழுந்துச்சு துப்பட்டா !!

Advertising
>
Advertising

நான் அர்ஜுன்...

இது என்னோட கதை.. காலேஜ் படிக்கும்போது லவ் கல்யாணம் பண்ணியே ஆகணும் கையில அஞ்சு பைசா கிடையாது, நான் லவ் பண்ற பொண்ணு, நீ இல்லனா நான் இருக்க மாட்டேன்னு சொல்ற டைப் எல்லாம் கிடையாது. ஒழுங்கா வேலைக்கு போடா பாடி சோடான்னு சொல்லுற ஒரு பிராக்டிகல் ஆன பொண்ணு... காலேஜ்ல நான் தான் அவங்களை ஒன்சைடு லவ் பண்ணேன், இதயம் முரளி மாதிரி நாலு வருஷமும் ஒரு நாள் கூட சொன்னதுமில்லை, கடைசி நாள் பேசியே ஆகணும்னு முடிவு பண்ணி போய் பேசினேன். அப்புறம் என்ன கையில காலுல விழாத குறையாக கெஞ்சி கூத்தாடி ஒத்துக்க வச்சேன் என் லவ்வ...

எனக்கு வயசு 21, அவளுக்கு 22 டேய் என்ன வின்னைத்தாண்டி வருவாயா வா, நீங்க கேக்குறது புரியுது ஆனா நடந்துச்சே... கல்யாணம் பண்ணி ஆகணும்னு அவங்க வீட்டில ஒன் legல ஸ்டண்ட் அப் (நிக்க) பண்ண நானும் வேறு வழியில்லாமல் வந்தேன் வெளிநாட்டுக்கு..

துபாய்ல விழுந்துச்சு துப்பட்டா மொமன்ட்...!!!

வேலைக்கு எல்லாம் பெருசா கஷ்டப்படுளாங்க, வந்து பத்து நாள்ல ஒரு நல்ல பிஆர்ஓ வேலை கிடைச்சது. படிச்சது என்னமோ இன்ஜினியரிங் தான். நமக்கு தேவை money, அது எப்படி உழைச்சு நல்ல வழியில வந்தா என்ன அப்படின்னு சேர்ந்தாச்சு.

முதல் மாத சம்பளம் வாழ்க்கையிலே ஃபர்ஸ்ட் சேலரி, வீட்டுக்கு பணத்தை அனுப்பிட்டு எதையோ பெருசா சாதித்திச்சுட்ட மாதிரி அப்படியே கெத்தா "எனக்கு ராஜாவான வாழுறேன்னு" பாட்டு போட்டாலும் உள்ள அழுகுறேன் வெளியே சிரிக்கிறேன், என்ன இந்த பக்கம் காசு வாங்கி, எந்த பக்கம் போச்சுனே தெரியல.

சரி கதைக்கு வருவோம், இப்ப கல்யாணம் பண்ணனும், பைய வேலைக்கு போயிட்டான். அங்குதான் ட்விஸ்ட், பொண்ணுக்கு வயசு கூடன்றத மறைச்சு ஆகணும். நம்ம ஆளுங்க எல்லாம் அந்தக் காலத்து பஞ்சாங்கத்தை பேசுறவங்க, வயசு கூட இருந்தா கண்டிப்பா ஒத்துக்க மாட்டாங்க, என்ன பண்ணலாம்னு யோசிச்சப்ப தான் சிம்பிளா ஒரு ஐடியா தோனுச்சு.

எங்க வீட்ல இருந்து அவங்கள பொண்ணு பாக்க போறப்ப என்னோட வயசு சொல்லணும், அவங்க வீட்ல இருந்து என்ன மாப்பிள்ளை பார்க்க வரப்ப நான் பொண்ணோட வயசு சொல்லணும்னு... சபையில வச்சு கேட்டுட்டா... அங்கதான் காட் கீவ்ஸ் ஹேன்ட் (கடவுள் இருக்கான் குமாரு) எப்படியோ மாத்தி மாத்தி சொல்லி தப்பிச்சுட்டோம். என்னங்க ஒரு வயசு தானே, இதுல என்ன இருக்குன்னு நீங்க எல்லாம் கேட்கலாம். அங்கதான் இன்னொரு குண்ட தூக்கிப் போடுவாங்க நம்ம சொந்தகாரங்க..

நானும் ஃபர்ஸ்ட் பிள்ளை எங்க எங்க வீட்டில, அவங்களும் ஃபர்ஸ்ட் பிள்ளை... தலைச்சன் பிள்ளை, தலைச்சம் பிள்ளையும் கல்யாணம் பண்ணக்கூடாது, பண்ணினா நல்லா இருக்க மாட்டாங்கன்னு எவனோ ஒரு மேங்கோ மடையன் சொன்னாத எங்க வீட்டு கிழவி சொல்ல, இது என்னடா சத்தியசோதனையினு சிரிச்ச மாதிரியே பேசி சமாளிச்சோம்....

ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணனும்னு சொல்லுவாங்க... "சொன்னதெல்லாம் ஒரே பொய், பொண்ண புடிச்சேன் கை" அப்புறம் என்ன கெட்டி மேளம் கெட்டி மேளம் ...  மாலை டும் டும்  மஞ்சர டும் டும்....

பின்குறிப்பு : இன்னைக்கு வரைக்கும் ரெண்டு ஃபேமிலியும் ஒன்னா சேர்ந்து கதை பேசறப்ப, யாராச்சும் அந்த காலத்துல எங்களுக்கு கல்யாணம் நடக்குறப்ப வயசுனு ஆரம்பிச்சா என் வைஃப் அந்த இடத்தைவிட்டு நைஸ்லி எஸ்கேப் ஆகிடுவாங்க...எங்க அம்மாவும் இந்த விஷயத்தை தெரிஞ்சும் தெரியாத மாதிரியே இருப்பாங்க 😂😂😂😂

DUBAI, FOREIGN TAMIL, LOVE STORY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்