"கைக்குழந்தையுடன் பழவண்டியை தள்ள முடியாமல் சிரமப்பட்ட பெண்".. வழியில் வந்த குழந்தைகள் ஓடிவந்து செஞ்ச காரியம்.!

முகப்பு > செய்திகள் > கதைகள்
By |

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்பார்கள். இந்த கூற்றை உண்மையாக்கும் வகையில், பெண்மணி ஒருவருக்கு இரண்டு பள்ளிக் குழந்தைகள் ஓடி வந்து உதவி செய்த வீடியோ வைரலாகி பலரை நெகிழவைத்துள்ளது.

Advertising
>
Advertising

குறிப்பிட்ட அந்த வீடியோவில் அப்படி என்ன இருக்கிறது என்றால், பழ வண்டி தள்ளிவரும் பெண்மணி ஒருவர், சற்றே மேடான பகுதியில் தமது பழவண்டியை தள்ள முடியாமல் தவித்து வருகிறார். அப்போது அந்த வழியில் 2 குழந்தைகள் நடந்து வருகின்றனர்.

அந்த குழந்தைகளுக்கு முன்பே அந்த வழியாக வந்த பலரும் அந்த பெண்மணியை தாண்டி வருகின்றனர். அவர்களுள் சிலர் அந்த பெண்மணி பழவண்டியை தள்ள முடியாமல் சிரமப்படுவதை உணருகின்றனர். ஆனால் எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை.

அப்போது அவ்வழியே வந்த பால் மனம் மாறாத குழந்தைகளிடம் சுரந்த கருணைதான் வீடியோவை காணும் அனைவரையும் நெகிழவைத்துள்ளது. ஆ, சீருடை அணிந்தபடி அந்த வழியாக அந்த பெண்மணிக்கு எதிரே வந்த அந்த இரண்டுக் குழந்தைகளும், அந்த பழவண்டியை மேட்டின் மீது ஏற்ற முடியாமல் சிரமப்படும் அந்த பெண்ணை பார்த்ததுமே, ஓடிசென்று இருவரும் ஆளுக்கொரு திசையில், வண்டியை மேட்டின் மீது வண்டி ஏற உதவுகின்றனர்.

இதனால் நெகிழ்ந்த அந்த பெண்மணியோ, தக்க தருணத்தில் தனக்கு உதவிய அந்த குழந்தைகளுக்கு ஏதாவது செய்து அன்பையும் நன்றியையும் வெளிப்படுத்த நினைத்து, தம் வண்டியில் இருந்த வாழைப்பழத்தை அவர்களுக்கு உபசரிக்கிறார். இத்தனைக்கும் அந்த பழவண்டியில் கைக்குழந்தை ஒன்று உறங்கிக் கொண்டும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எங்கு எப்போது எடுக்கப்பட்டது என சரிவர தெரியவராத இந்த வீடியோவை பகிரும் இணையவாசிகள், குழந்தைகளுடம் இருக்கும் மனிதநேயத்துக்கு சான்றாக இந்த வீடியோ விளங்குவதாக குறிப்பிட்டு வருகின்றனர்.

VIRALVIDEO, VIDEOVIRAL, CHILDRENS, FRUIT VENDOR, HEARTWARMING, HEARTMELTING

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்