‘எக்ஸாம் ஹாலில் நூதனமுறையில் காப்பி’.. ‘கையும் களவுமாக’ சிக்கிய இளைஞர்.. கடைசியில் நடந்த சோகம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தேர்வில் நூதன முறையில் காப்பி அடித்த இளைஞரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பீகார் மாநிலம் முசாஃபர்பூரில் காவலர் பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. அப்போது தேர்வு எழுதிக்கொண்டிருந்த தனஞ்செய் குமார் என்ற இளைஞர், முனுமுனுத்துகொண்டே இருந்துள்ளார். இதனால் அவர் மீது அதிகாரிகள் சந்தேகமடைந்து பரிசோதித்துள்ளனர். அப்போது அவர், செல்போனில் இயர் போனை மாட்டிக்கொண்டு யாரிடமோ விடைகளை கேட்டு எழுதி வந்தது தெரியவந்துள்ளது.

முன்னதாக அதிகாரிகள் சந்தேகம் அடைந்தபோது, மாட்டிக்கொள்ளக்கூடாது என எண்ணி தனஞ்செய் குமார் இயர்போனை காதுக்குள் திணித்துள்ளார். இதனால் காதுக்குள் இயர்போன் சிக்கியுள்ளது. மேலும் அதை எடுக்க முடியாமல் வலியால் துடித்துள்ளார். இதனை அடுத்து அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அதிகாரிகள் அனுமதித்துள்ளனர். காவலர் பணிக்கான தேர்வில் இளைஞர் ஒருவர் இயர்போன் வைத்து காப்பி அடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்