திருமணத்தில் முடிந்த 2 வருட காதல்.. அடுத்த 45 நாளுல அரங்கேறிய ட்விஸ்ட்.. மாப்பிள்ளை வீட்டில் பரபரப்பு

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

காதலனுடன் திருமணம் நடந்து சுமார் 45 நாட்களில், இளம்பெண் எடுத்த முடிவும், அதற்கு முன் நடந்த சில ட்விஸ்ட்களும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | விபத்தில் பறிபோன கை.. "ஆனாலும் கொஞ்சம் கூட ஒடஞ்சு போகலேயே.." 80 வயதிலும் மிரள வைக்கும் முதியவர்..

பீகார் மாநிலம், பாட்னா அருகேயுள்ள நவ்பட்பூர் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் சத்யானந்த். கடந்த இரண்டு ஆண்டுகளாக, ராணி குமாரி என்ற பெண்ணை சத்யானந்த் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இவர்களின் காதல் விவகாரம், இருவரின் பெற்றோர்களுக்கும் தெரிய வரவே, அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனாலும் பெற்றோர்கள் எதிர்ப்பையும் மீறி, ஒன்றாக இணைந்து வாழ வேண்டும் என்பதில் சத்யானந்த் மற்றும் ராணி குமாரி ஆகியோர் பிடிவாதமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

எதிர்ப்பை மீறி திருமணம்

ஒருவருக்கொருவர் இல்லாமல் வாழ முடியாது என அவர்கள் தீர்மானித்திருந்த நிலையில், பெற்றோர்களும் ஒரு வழியாக அவர்களின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இதன் பின்னர், குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சூழ, கடந்த ஏப்ரல் மாத இறுதியில் சத்யானந்த்  மற்றும் ராணி குமாரி ஆகியோரின் திருமணம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

திருமணத்திற்கு பின்னர் அதிர்ச்சி

இதனைத் தொடர்ந்து, திருமணம் முடிந்து சில நாட்களுக்குப் பின்னர், சத்யானந்த்திற்கு அதிர்ச்சி விஷயம் ஒன்று தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, வேறொரு ஆணுடன் இரவு நேரத்தில் தனது மனைவி அதிக நேரம் பேசி வந்ததையும் சத்யானந்த் கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதுபற்றி தனது மனைவியிடம் சத்யானந்த் பேசியபோது, தனக்கு முன்பு வேறொருவரை காதலித்து வந்ததாகவும், அவருடன் இணைந்து வாழ விருப்பம் உள்ளதாகவும், ராணி குமாரி கூறியதாக சொல்லப்படுகிறது.

காணாமல் போன மனைவி

இரண்டு ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண், திடீரென வேறு ஒருவருடன் வாழ வேண்டுமென தெரிவித்ததால் அதிர்ச்சியடைந்துளார் சத்யானந்த். இதன் பெயரில், கடந்த சில நாட்களாக சத்யானந்த் மற்றும் அவரது மனைவி ராணி குமாரி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அப்படி ஒரு சூழ்நிலையில், திருமணமான சுமார் 45 நாட்கள் கழித்து ராணி குமார் எடுத்த முடிவு ஒன்று அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

தனது கணவர் தூங்கிக் கொண்டிருந்த வேளையில், தனது வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்துடன், வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார் ராணி குமாரி. முன்னாள் காதலனுடன் ஓட்டம் பிடித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. காதலித்து திருமணம் செய்த மனைவி, பணம் மற்றும் நகையுடன் வெளியேறியதால், இது குறித்து போலீசில் புகார் ஒன்றையும் அளித்துள்ளார் சத்யானந்த்.

Also Read | "என்ன மன்னிச்சுடுங்க.." திருடிய பணத்தை மீண்டும் கோவில் உண்டியலில் போட்ட திருடன்.. 'பின்னணி' என்ன??

WOMAN, WOMAN FLEE, AFTER MARRIAGE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்