"ராத்திரில சூட்கேசுடன் நின்ன இளம்பெண்".. கரெக்ட்டா வந்த போலீஸ்.. கணவனை பிரிந்து காதலருடன் லிவிங் டுகெதரில் இருந்த பெண் செஞ்ச பயங்கரம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்திர பிரதேசத்தில் கல்யாணம் செய்துகொள்ள மறுப்பு தெரிவித்த காதலனை கொலை செய்து சூட்கேசில் தூக்கிச் செல்ல முயன்ற காதலியை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

Advertising
>
Advertising

Also Read | ஒரிஜினல் போலீஸ்கிட்டயே அபராதம்.. ஆள் தெரியாம காசு கேட்ட போலி போலீஸ்.. அடுத்து நடந்தது தான் ஹைலைட்டே..!

வாக்குவாதம்

உத்திர பிரதேச மாநிலம் காஜியாபாத் பகுதியை சேர்ந்தவர் பிரோஸ். இவர் தனது காதலியுடன் கடந்த 4 வருடங்களாக ஒரே வீட்டில் லிவிங் டுகெதரில் இருந்திருக்கிறார். அழகு நிலையம் ஒன்றில் பணிபுரிந்து வந்த பிரோஸ் மற்றும் அவரது காதலி இடையே திருமணம் குறித்து தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனையடுத்து இருவருக்குள்ளும் அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தங்களது வீட்டுக்கு வெளியே சூட்கேசுடன் பிரோஸ்-ன் காதலி நின்றிருந்திருக்கிறார். அப்போது ரோந்து சென்ற காவல்துறையினர் இரவு நேரத்தில் சந்தேகத்துக்கு இடமாக இருந்ததாக கூறி அந்த இளம்பெண்ணிடம் விசாரணை செய்திருக்கின்றனர். காவல்துறை அதிகாரிகளிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்த இளம்பெண் மீது சந்தேகம் வரவே, சூட்கேஸை திறக்கும்படி போலீசார் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், அதற்கு மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனை தொடர்ந்து, சூட்கேஸை கைப்பற்றிய போலீசார் அதனை திறந்து பார்த்ததும் அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றுவிட்டனர். அதற்குள் பிரோஸ்-ன் சடலம் இருந்திருக்கிறது.

விசாரணை

இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட அந்த பெண்ணிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்திருக்கின்றன. விசாரணையில் பிரோஸ் தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டதாகவும் அதனாலேயே அவரை கொலை செய்ததாகவும் அந்த பெண் காவல்துறையினரிடத்தில் தெரிவித்திருக்கிறார்.

சனிக்கிழமை திருமணம் குறித்து இருவருக்குள்ளும் வாக்குவாதம் நடைபெற்றதாகவும், அப்போது தன்னுடைய குணம் குறித்து அவதூறாக பிரோஸ் பேசியதாகவும் அதன் காரணமாக கோபத்தில் பிரோஸ்-ஐ கொலை செய்ததாகவும் அந்த பெண் வாக்குமூலம் அளித்திருக்கிறார். விசாரணையில் அவருக்கு ஏற்கனவே தீபக் யாதவ் என்பவருடன் திருமணம் நடந்திருப்பது தெரியவந்திருக்கிறது. கணவனை பிரிந்த அவர், கடந்த 4 ஆண்டுகளாக பிரோஸ்-உடன் ஒன்றாக வசித்து வந்ததாக காவல்துறை அதிகாரிகளிடத்தில் தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவம் உத்திர பிரதேச மாநிலத்தையே உலுக்கியுள்ளது.

Also Read | "வீடோட மொத்த தீவும் விற்பனைக்கு".. நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு.. விலையை கேட்டுட்டு குஷியான மக்கள்..!

UTTARPRADESH, WOMAN, ARREST, LOVER, SUITCASE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்