பணம் பந்தயம் வைத்து லுடோ?.. வீட்டு உரிமையாளரிடம் தோற்றதால் பெண் எடுத்த முடிவு.. அடுத்த நிமிஷமே வீட்டுக்கு தெறிச்சு ஓடிய கணவன்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் செல்போனில் உள்ள கேம்கள் மீது அதிக நாட்டம் உள்ளது. அதனை விளையாடி பலரும் பொழுது போக்கி வரும் சூழலில், பெண் ஒருவர் லுடோ கேமில் தொடர்ந்து ஆடி நடந்ததாக கூறப்படும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | குனிந்து பாதம் தொட்டு சாமி கும்பிட்ட பக்தர்.. சாயிபாபா காலடியிலேயே பிரிந்த உயிர்..!

உத்தர பிரதேச மாநிலம், நாகர் கொட்வாளியை அடுத்துள்ள தேவ்காளி என்னும் பகுதியைச் சேர்ந்தவர் ரேணு. இவரது கணவர் ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரில் பணியாற்றி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ரேணு லுடோ விளையாட்டுக்கு அதிகம் அடிமையானதாக கூறப்படும் நிலையில், தொடர்ந்து அந்த விளையாட்டை விளையாடி தனது பொழுதையும் கழித்து வந்துள்ளார். அப்படி ஒரு சூழலில் தனது வீட்டு உரிமையாளருடன் தொடர்ந்து லுடோ விளையாடுவதையும் ரேணு பழக்கமாக வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, வீட்டு உரிமையாளருடன் பணம் வைத்தும் பந்தயம் கட்டி ஆடி உள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல், பந்தயம் கட்ட பணம் இல்லாத காரணத்தினால் தன்னையே ரேணு வீட்டு உரிமையாளரிடம் பந்தயமாக வைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இது தொடர்பாக ராஜஸ்தானில் இருக்கும் தனது கணவனிடமும் ரேணு கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து பிரதாப்கருக்கு திரும்பிய ரேணுவின் கணவர் போலீசாரிடம் புகார் கொடுத்தது மட்டுமில்லாமல் இது தொடர்பாக சமூக வலைதளத்திலும் பதிவிட்டதாக சொல்லப்படுகிறது.

தேவ்காளியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார் ரேணு. ஆறு மாதங்களுக்கு முன்பு வேலைக்காக ஜெய்ப்பூர் சென்ற அவரது கணவர், ரேணுவுக்கு தொடர்ந்து பணம் அனுப்பி வந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் அந்த பணத்தை சரியான முறையில் செலவு செய்யாமல் லுடோ விளையாட்டில் பந்தயம் வைத்து மொத்தத்தையும் ரேணு தீர்த்ததாகவும் கூறப்படுகிறது. இறுதியில் பந்தயம் கட்ட பணம் இல்லாத காரணத்தினால், தன்னை ஒரு பந்தயமாக வைத்து வீட்டு உரிமையாளருடன் ரேணு லுடோ விளையாடியதாகவும் சொல்லப்படுகிறது.

ரேணு மற்றும் அவரது கணவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது லுடோ விளையாட்டில் தோற்றதால் வீட்டு உரிமையாளரோடு ரேணு வாழ்ந்து வருவதாகவும் அவரை விட்டு கணவருடன் வர ரேணு மறுப்பதாகவும் கூறி இருப்பதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசாரும் விசாரணையில் இறங்கியுள்ள நிலையில், பந்தயம் வைத்து வீட்டு உரிமையாளருடன் பெண் வசித்து வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also Read | கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டதா?.. சீன ஆய்வக விஞ்ஞானி சொல்லிய பதற வைக்கும் தகவல்..!

UTTARPRADESH, WOMAN, ADDICT, LUDO GAME, LANDLORD

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்