VIDEO: “ஏரியா பக்கம் வந்துராத.. இன்னும் உக்கிரமா இருப்பேன்!”.. தடுப்பையும் மீறி வெறித்தனமாக மோதிக்கொண்ட புலிகள்!.. தெறிக்கவிடும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கர்நாடகாவில் பன்னேர்கட்டா உயிரியல் பூங்காவில் கடந்த வருடம் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம் பன்னேர்கட்டா தேசிய உயிரியல் பூங்காவில் எக்கச்சக்க உயிரினங்கள் உள்ளன. கடந்த ஆண்டு இந்த பூங்காவில் ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது இரு புலிகள் ஒன்றையொன்று ஆக்ரோஷமாக பாய்ந்து சண்டையிட்டுக் கொண்டிருந்தன. வேலியின் ஒரு புறத்தில் ஒரு புலியும், மறுபுறத்தில் இன்னொரு புலியும் நின்று கொண்டு சண்டை போட்டுக் கொண்டிருந்த இந்த வீடியோ வனத்துறையினரால் எடுக்கப்பட்டு பின்னர் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.

வெவ்வேறு இனங்களை சேர்ந்த இந்த புலிகள் சண்டையிட்டுக் கொண்ட இந்த சம்பவம் கடந்த ஆண்டு நிகழ்ந்தது என்றாலும், தற்போது இதனை வனத்துறை அதிகாரி சுஷாந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்ததை அடுத்து இந்த வீடியோ நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பொதுவாகவே புலிகள் தங்களது பலத்தை நிரூபிப்பதற்காகவும், பெண் புலியோடு சேர்வதற்கும் சண்டையிட்டுகொள்வன என்பதும்,

பன்னேர்கட்டா உயிரியல் பூங்காவில் புலிகள் இவ்வாறு சண்டையிட்டுக் கொள்வது முதல் முறை அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்