கல்யாணத்துக்கு 'கெஸ்டா' வந்து இப்படி அநியாயமா... பொண்ணு, மாப்பிளைய 'பிரிச்சு' வச்சுட்டு போய்ட்டாரே!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

திருமணத்துக்கு வந்திருந்த உறவினரால் பெண்ணையும், மாப்பிள்ளையையும் பிரித்து வைத்தனர்.

மத்திய பிரதேசம் போபாலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு இளம்ஜோடி திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணத்துக்கு குருகிராமில் இருந்து உறவினர் ஒருவர் விருந்தினராக வந்திருந்தார். திருமணத்துக்கு 3 நாட்கள் முன்பு தான் அவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டுள்ளார்.

பரிசோதனை முடிவுகள் திருமண நாளில் தான் வந்தது. அதில் அவருக்கு கொரோனா உறுதியாகி இருந்தது. இதையடுத்து அவரை தனிமைப்படுத்த நினைத்த அதிகாரிகளுக்கு அவர் திருமணத்தில் கலந்து கொண்ட தகவல் கிடைத்தது. இதையடுத்து புதுமண ஜோடியும் திருமணத்தில் கலந்து கொண்ட 85 பேரும் தனிமைப்படுத்தப்பட்டனர். 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்