அவிழ்ந்து விழும் இடுப்புத்துண்டு... பக்கத்து வீட்டுக்காரரிடம் ஆக்ரோஷ சண்டை... வைரல் DSP!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

டிஎஸ்பி ஒருவர் தனது இடுப்புத்துண்டு கழண்டு விழுவது கூட தெரியாமல் பக்கத்து வீட்டுக்காரர் உடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் வீடியோ காட்சி சமுக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Advertising
>
Advertising

மஹாராஷ்டிரா மாநிலம் இந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் டிஎஸ்பி வேதாந்த் சர்மா. இவர் உஜ்ஜெயின் லோக் ஆயுக்தா டிஎஸ்பி ஆக பணியாற்றி வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் சந்தீப் விஜ் என்னும் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி வசித்து வந்துள்ளார். சந்தீப் விஜ் வீட்டில் கடந்த சில நாட்களாகக் கட்டுமானப் பணிகள் நடந்து வந்துள்ளன.

கட்டுமானப் பணிகளின் போது எழும் தூசி டிஎஸ்பி வேதாந்த் சர்மாவின் விலை உயர்ந்த BMW காரின் மீது படிந்துள்ளது. இதுதொடர்பாக பக்கத்து வீட்டில் பணியாற்றும் கட்டுமானத் தொழிலாளர்களிடம் புகார் தெரிவித்துள்ளார் வேதாந்த் சர்மா. பின்னர் இதுதொடர்பாக வழக்கும் தொடர்ந்து உள்ளார்.

இதை அறிந்த பக்கத்து வீட்டுக்காரர் சந்தீப் விஜ் டிஎஸ்பி வேதாந்த் இடம் வந்து சமாதானம் பேச அவர் வீட்டுக்கு வந்துள்ளார். டிஎஸ்பி வீட்டு வாசல் முன்னாள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே பேச்சு வாக்குவாதம் ஆகிவிட்டது. இதனால் டிஎஸ்பி பக்கத்து வீட்டுக்காரரான சந்தீப் மீது தாக்க பதிலுக்கு அவரும் இவரை அடிக்க வாய் வார்த்தை கைகலப்பு ஆகிவிட்டது.

இந்த சண்டையில் டிஎஸ்பி-யின் இடுப்புத்துண்டு அவிழ்ந்து விழ அந்த சமயம் பார்த்து சந்தீப் அங்கிருந்து ஓடிவிட்டார். பின்னர் வீட்டுக்குள் சென்று மீண்டும் அதே துண்டை கட்டிக்கொண்டு கையில் குச்சி ஒன்றை எடுத்துக் கொண்டு சாலைக்கு வந்துவிட்டார் டிஎஸ்பி. இந்த சண்டை காட்சிகள் அனைத்தும் அருகில் இருந்த சிசிடிவி-யில் பதிவு ஆகி உள்ளது.

இந்த சிசிடிவி காட்சிகள் தான் தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MADHYA PRADESH, மத்தியபிரதேசம், இடுப்புத்துண்டு, DSP, MADHYAPRADESH, VIRAL VIDEO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்