‘லத்தியால்’ சரமாரியாகத் தாக்கிக் கொண்ட ‘காவலர்கள்’.. ‘வீடியோ வைரலானதால்’ வெளிவந்த ‘அதிர்ச்சிக் காரணம்..’

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்தரப்பிரதேசத்தில் இரண்டு காவலர்கள் ஒருவரையொருவர் சரமாரியாகத் தாக்கிக் கொள்ளும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், இரண்டு காவலர்களுக்கு இடையே வாங்கிய லஞ்சப் பணத்தைப் பிரிக்கும் விஷயத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அவர்கள் ஒருவரையொருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டுள்ளனர். அப்போது அருகில் இருந்த ஒரு கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

இதுகுறித்து பேசியுள்ள மாவட்ட கண்காணிப்பாளர் அசுதோஷ் மிஸ்ரா, “இதில் சம்பந்தப்பட்ட இரண்டு காவலர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” எனக் கூறியுள்ளார். லஞ்சப் பணத்தைப் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் காவலர்கள் தாக்கிக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

UTTARPRADESH, POLICE, FIGHT, BRIBE, SHOCKING, VIIRAL, VIDEO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்