ரயிலில் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்த பயணி.. "திடீர்ன்னு ஜன்னல உடைச்சுக்கிட்டு வந்த கம்பி".. ஒரு நிமிடத்தில் நடந்த மரணம்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ரயிலில் ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த பயணி ஒருவருக்கு திடீரென யாரும் எதிர்பாராத நேரத்தில் நடந்த சம்பவம், கடும் அதிர்ச்சியை உண்டு பண்ணி உள்ளது.

Advertising
>
Advertising

கடந்த சில தினங்களுக்கு முன்பாக, டெல்லி முதல் கான்பூர் வரை செல்லும் நீலாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுள்ளது. அப்போது காலையில் சுமார் 8:45 மணி அளவில், உத்தர பிரதேச மாநிலம் வடக்கு மத்திய ரயில்வேயின் எல்லைக்கு உட்பட்ட பிரக்யராஜ் டிவிஷனில், தான்வார் மற்றும் சோம்னா பகுதிக்கு இடைப்பட்ட பகுதியில் நீலாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

மேலும் அந்த ரயிலின் பொது வகுப்பு பெட்டியில் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து ஹரிஷ்கேஷ் துபே என்ற நபரும் பயணம் மேற்கொண்டுள்ளார்.

அந்த சமயத்தில் யாரும் எதிர்பாராத விதமாக ஒரு அசம்பாவித சம்பவம் ரயிலுக்குள் அரங்கேறி உள்ளது. ஜன்னல் வழியாக கண்ணாடியை உடைத்து உள்ளே ஊடுருவி வந்த இரும்பு கம்பி ஒன்று, ஹரிஷ்கேஷ் கழுத்தில் குத்தி கிழித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல்கள் கூறுகின்றது. சுமார் ஐந்து அடி நீளமுள்ள கம்பி என விசாரணையில் தெரிய வந்துள்ள நிலையில், ரயில் தண்டவாளத்தில் பயன்படுத்தக்கூடிய கம்பி என்பதும் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.

இந்த சம்பவத்தின் காரணமாக அலிகார் ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டு இறந்த நபரின் உடல் அரசு ரயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. ரயிலில் பயணம் செய்த நபருக்கு எதிர்பாராத விதமாக நடந்த இந்த மரணம் குறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின் படி, ரயில் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த இரும்பு கம்பி வந்து விபத்து நடந்த இடத்தில் ரயில் தண்டவாள வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதும் தெரிய வந்துள்ளதாகவும், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாவும் தெரிகிறது.

ரெயிலில் பயணம் செய்த நபருக்கு, ஜன்னலை உடைத்து கொண்டு பாய்ந்து வந்த இரும்பு கம்பியால் மரணம் நேர்ந்துள்ள சம்பவம், கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

TRAIN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்