“ஃபேக்டரியில வேலை வாங்கித் தர்றோம்.. வாங்க!”.. இளம் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரர்கள்!.. அதன் பிறகு நடந்த கொடூர சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ரோமானியாவில் இருந்து பிரிட்டனுக்கு வந்த இளம் பெண்ணை ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரர்கள் அதன் பிறகு செய்த காரியம் ஈரக்கொலையை நடுங்க வைத்துள்ளது.

இயோன் டிமிட்ரு மற்றும் இல்சிக் டிமிட்ரு என்கிற 24 வயது மற்றும் 19 வயது சகோதரர்கள் ரோமானியாவில் இருந்து லண்டனுக்கு வந்த 20 வயது இளம் பெண்ணை லூடான் விமான நிலையத்தில் இருந்து தொழிற்சாலையில் வேலைக்கு சேர்த்துவிடுவதாக அழைத்துச் சென்றனர். அதன் பின்னர் வடக்கு லண்டனுக்கு அப்பெண்ணை அழைத்துச் சென்ற சகோதரர்கள் இருவரும் அப்பெண்ணை கொன்றுவிடுவதாக மிரட்டி, சாலையில் நின்றபடி பாலியல் தொழிலில் ஈடுபட வைத்தனர்.

அதன் மூலம் கிடைக்கும் பணத்தை பறித்துக்கொண்ட அந்த சகோதரர்கள், 7 மாத கர்ப்பிணியாக அப்பெண் ஆன பிறகும், 11 ஆண்களுடன் அவரை பாலியல் வல்லுறவுக்குத் தள்ளியுள்ளனர். சில நாட்கள் கழித்து, வயிற்றில் இருந்த தன் குழந்தை இறந்திருக்கும் என கருதிய அப்பெண், தனது வாடிக்கையாளர் ஒருவரிடம் போன் வாங்கி, தம் சொந்த நாட்டில் உள்ள குடும்பத்தாருக்கு தெரிவித்த தகவலின் பேரில் அங்கு வந்த போலீஸார் அப்பெண்ணை மீட்டதோடும் அந்த இளைஞர்களை கைது செய்தனர். அதே சமயம், கர்ப்பிணியாக இருந்த அப்பெண், சொந்த நாட்டுக்கு திரும்பிய பின்னர் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்