Watch Video: நடுரோட்டில்.. நேருக்கு நேராக 'மோதிக்கொண்ட' கார்கள்.. 'தீப்பற்றி' எரிந்த பயங்கரம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தேசிய நெடுஞ்சாலையில் நேருக்கு நேராக மோதிக்கொண்ட கார்கள் இரண்டும், திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாநிலம் சூரியாபேட்டை தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை 8 மணிக்கு இரண்டு கார்கள் நேருக்கு நேராக மோதிக்கொண்டன. தொடர்ந்து அந்த கார்கள் இரண்டும் தீப்பற்றி எரிய ஆரம்பித்தன. இதில் இரண்டு கார்களில் இருந்த நபர்களும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர்.

தற்போது அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தற்போது இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்