கோவில் வாசலில் பிளாஸ்டிக் பை.. "திறந்து பார்த்தா.." .. மனைவி செய்த காரியம்.. ஊரையே நடுங்க வைத்த பதைபதைப்பு சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

திரிபுரா: கோவில் ஒன்றின் வாசல் அருகே, பிளாஸ்டிக் பை ஒன்று கிடந்த நிலையில், அதனை திறந்து பார்த்த போது கடும் அதிர்ச்சி காத்திருந்தது.

Advertising
>
Advertising

திரிபுரா மாநிலம், கோவாய் மாவட்டத்தில், ரபீந்திரா தண்டி (வயது 50) என்பவர், தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்துள்ளார். ரபீந்திரா ஒரு தினசரி கூலித் தொழிலாளி ஆவார்.

பிளாஸ்டிக் பை

இந்நிலையில், அப்பகுதியில் அமைந்துள்ள ரபீந்திராவின் குடும்ப கோவில் ஒன்றில், ஒரு பிளாஸ்டிக் பை கிடந்துள்ளது. அதனை திறந்து பார்த்த போது, அனைவருக்கும் கடும் அதிர்ச்சி காத்திருந்தது. ரபீந்திராவின் தலை மட்டும் அந்த பையில் இருந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்ட போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

படுத்து கிடந்த அப்பா

ரபீந்திராவின் மனைவி தான், தன் கணவரை இப்படி கொலை செய்து, அந்த தலையை பிளாஸ்டிக் பைக்குள் வைத்து, அதை தங்கள் குடும்ப கோவில் வாசலில் வைத்தது தெரிய வந்தது. இது தொடர்பாக, ரபீந்திராவின் மூத்த மகன் பேசுகையில், “என் அம்மா எப்போதும் சைவம் தான் சாப்பிடுவார். ஆனால், நேற்று முன்தினம் இரவு, சிக்கன் சாப்பிட்டு விட்டு தூங்கினார். திடீரென, அன்றிரவு நான் கண் விழித்து பார்த்த போது, எனது தந்தை தலை இல்லாத நிலையில் படுத்து கிடந்தார். அதை பார்த்து அதிர்ந்தேன். இன்னொரு பக்கம், எனது தாயார், கையில் ஆயுதம் ஒன்றுடன் நின்று கொண்டு இருந்தார்.” என கூறியுள்ளார்.

உளவியல் ரீதியான பிரச்சனைகள்?

மேலும் பேசிய அந்த மகன், “நாங்கள் சுதாரித்துக் கொண்டதும், வேகமாக வெளியே ஓடி, அந்த பிளாஸ்டிக் பையை மட்டும் கோவில் வாசலில் கொண்டு வைத்தார்” என தெரிவித்துள்ளார். மேலும், தனது தாய்க்கு உளவியல் ரீதியாக பிரச்சனைகள் இருந்து வந்ததாகவும், இதற்காக வேண்டி சிகிச்சை மேற்கொண்டு வந்ததாகவும் அவரது மகன் தெரிவித்துள்ளார்.

போலீசார் விசாரணை

கணவரைக் கொலை செய்ததைத் தொடர்ந்து, தம் வீட்டின் அறைக்குள் சென்று, கதவினை அடைத்து வைத்துக் கொண்டு, அந்த பெண் இருந்துள்ளார். அங்கிருந்து, போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இதுபற்றி, விசாரணையை ஆரம்பித்துள்ள போலீசார், மகன் தெரிவித்ததை போல அந்த பெண்ணுக்கு ஏதேனும் உளவியல் ரீதியாக பிரச்சனைகள் உள்ளதா அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்குமா என்பது பற்றியும் விசாரித்து வருகின்றனர்.

கணவரை இப்படி கொலை செய்த மனைவியால், அப்பகுதியில் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

TRIPURA, WIFE, HUSBAND

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்