'பறந்து வந்த கார்'... 'நொறுங்கிய கார்கள்!'... 'கார் ஓட்டும் போது'... 'அதிர்ச்சி வீடியோ'...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கார் ஓட்டும் போது வலிப்பு வந்ததால், காற்றில் பறந்த கார் விபத்துக்குள்ளாகிய சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் மொஹாலியைச் சேர்ந்தவர், ராஜிந்தர் சிங். அவர் சண்டிகர் அருகே கார் ஓட்டிக் கொண்டிருந்த போது, அவருக்கு திடீரென வலிப்பு வந்தது. மூன்று சாலைகள் சந்திக்கும் ஒரு இடத்தில், சாலையில் இருந்த தடையின்  மீது மோதிய கார், காற்றில் பறந்து சென்று எதிரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மீது மோதியது. விபத்துக்குள்ளான மூன்று கார்களும், மிகுவும் சேதமடைந்துள்ளன.

இந்நிலையில், விபத்து குறித்து ராஜிந்தர் சிங்கிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் மது எதுவும் அருந்தவில்லை என்றும், வலிப்பு வந்ததால் தான் விபத்து ஏற்பட்டதாகவும் கூறினார். எனவே, மற்ற இரு கார்களின் உரிமையாளர்களும், அவருடன் சமரசமாக சென்றனர்.

விபத்து ஏற்பட்ட காட்சிகள் சிசிடிவி-யில் பதிவாகியுள்ள நிலையில், அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ACCIDENT, CAR, FLYING

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்