'டிக்டாக் தடை'... 'மக்கள் பெருசா பாதிக்கப்பட போறாங்க' ... எம்.பி சொன்ன பரபரப்பு காரணம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

டிக்டாக் தடை மக்களிடையே எந்த மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து எம்.பி நுஸ்ரத் ஜஹான் பேசியுள்ளார். அவரின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவுடன் எல்லை பிரச்சனை  நிலவி வரும் நிலையில், தேசத்தின் பாதுகாப்பு கருதி, சீனாவின் 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதையடுத்து கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டிக்டாக் உள்படச் செயலிகள் நீக்கப்பட்டுள்ளன. டிக்டாக் செயலியைப் பயன்படுத்தும் சிலர் அதில் எல்லை மீறிச் செயல்படுகிறார்கள் என்றும், ஆபாசமான வீடியோகளை வெளியிடுகிறார்கள் எனப் பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், டிக்டாக் தடைக்குப் பலரும் ஆதரவு தெரிவித்து இருந்தார்கள்.

இந்நிலையில் டிக்டாக் செயலி நீக்கத்தால் பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் பாதிக்கப்பட்டது போன்றே மக்கள் பாதிக்கப்படுவார்கள் என மேற்கு வங்காள திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. நுஸ்ரத் ஜஹான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், ''இது மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தும் முடிவு. பலரும் வேலையின்றி இருக்கிறார்கள். எனவே இந்த தடை பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது மக்கள் சந்தித்த பாதிப்பு போன்று இப்போதும் பாதிக்கப்படுவார்கள்.

தேச பாதுகாப்பு என்பதால் டிக்டாக்கை தடை செய்வதால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் நான் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு யார் பதில் சொல்வார்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மற்ற செய்திகள்