VIDEO: 'புட் பால்' சாம்பியனா இருப்பாங்க போலையே...! 'மாமியர் வீட்ல என்ட்ரி ஆகுறப்போ செய்ய சொன்ன சடங்கு...' - சுத்தி நின்னவங்க ஒரு நிமிஷம் ஆடி போயிட்டாங்க...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மணமகள் ஒருவர் முதல்முறை தன் புகுந்த வீட்டுக்கு சென்ற போது செய்த சம்பவம் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

பொதுவாக திருமணம் முடிந்து வீட்டிற்கு வரும் மருமகள் ஒவ்வொரு குடும்ப வழக்கத்தின்படி, குடம் நிறைய நீர் எடுத்து வருவது, கையில் விளக்கேந்தி வருவது, குங்கும தண்ணீரில் கால் நினைத்து அடி எடுத்து வைப்பது என வெவ்வேறு வகையில் இருக்கும்.

புகுந்த வீட்டிற்கு செல்லும் முதல் நாள் தம்பத்திகளுக்கும், மாமியர் வீட்டில் உள்ளவர்களுக்கும் மறக்க முடியாத ஒரு அனுபவமாக இருக்கும். அந்த அனுபவம் அனைவருக்கும் சந்தோஷத்தை கொடுக்கும் விதமாக இருக்க வேண்டும்.

ஆனால்  இந்த வீடியோவில் வரும் பெண் செய்த காரியம் தான் தற்போது இந்த வீடியோவை வைரலாக்கியுள்ளது.

இந்த வீடியோவில், புதுமணப்பெண்ணை வரவேற்க அரிசி அளக்கும் படி முழுவதும் அரிசியை கொட்டி வைத்துள்ளனர். அப்போதய உள்ளே நுழையும் மணமகள் அரிசி நிறைந்திருக்கும் படியை கால்பந்தை எட்டி உதைப்பது போல் வேகமாக எட்டி உதை்து வருகிறாள். அரிசி வீடு முழுவதும் இறைந்து விடுகிறது. இது அங்கிருந்த மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த வீடியோவை மில்லியன் கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்