முதலில் Food Poisoning.. அப்புறமா நெஞ்சு வலி.. கல்யாணம் ஆன ஒரு மாசத்துல புருஷனுக்கு வந்த பிரச்சனை.. விசாரணையில் தெரிய வந்த அதிர்ச்சி

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

திருமணமான 36 நாட்களில், கணவர் நெஞ்சு வலியால் உயிரிழந்ததாக மனைவி கூறிய நிலையில், தொடர்ந்து விசாரித்த போலீசாருக்கு பல்வேறு அதிர்ச்சி தகவல் காத்திருந்தது.

Advertising
>
Advertising

தெலுங்கானா மாநிலம், சித்தி பேட்டை மாவட்டத்திலுள்ள குடிகண்டுலா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் சியாமளா.

இவருக்கும், சின்ன நிஜாம்பேட்டை என்னும் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவருக்கும் கடந்த மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றிருந்தது.

நெஞ்சுவலி மூலம் இறந்த கணவர்?

இதனிடையே, திருமணம் முடிந்து சுமார் ஒரு மாதம் மட்டுமே தாண்டி இருந்த நிலையில், திடீரென கணவர் சந்திரசேகருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக மனைவி சியாமளா தெரிவித்துள்ளார். மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக அவர் கூறவே, சித்தி பேட்டை அரசு மருத்துவமனையில் வைத்து சந்திரசேகர் இறந்ததாக கூறப்பட்டது.

தாயாருக்கு வந்த சந்தேகம்

அப்போது, இளம் வயதில் சந்திரசேகருக்கு நேர்ந்ததை எண்ணி, சந்திரசேகரின் உறவினர்கள் கதறி அழுதுள்ளனர். ஆனால், மகனின் மரணம் குறித்து சந்திரசேகரின் தாயாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அது மட்டுமில்லாமல், போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றையும் அவர் அளித்துள்ளார்.

இது தொடர்பாக போலீசார், கடந்த சில தினங்களாக தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில், பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருந்தது. சியாமளாவின் மொபைலை போலீசார் சோதித்து பார்த்த போது, சிவகுமார் என்பவரிடம் அவர் பலமுறை பேசி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, கணவரின் மரணம் தொடர்பாக சியாமளாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் தெரிய வந்த பிளாஷ்பேக்

அப்போது, வெளியான தகவலின் அடிப்படையில், தனது சிறு வயது நண்பரான சிவக்குமார் என்பவரை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார் சியாமளா. ஆனால், அவரின் விருப்பத்திற்கு மாறாக, சியாமளாவின் குடும்பத்தினர், சந்திரசேகருடன் திருமணத்தை நடத்தி வைத்தனர். இருந்தும், சந்திரசேகருடன் வாழ சியாமளாவிற்கு விருப்பமில்லை என கூறப்படுகிறது.

திருமணத்திற்கு பிறகும், காதலனான சிவகுமாரிடம் தொடர்ந்து சியாமளா பேசி வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், கணவரை கொலை செய்யவும் சியாமளா திட்டம் போட்டுள்ளார். அதன்படி, சிவாவுடன் உதவியுடன், கடந்த ஏப்ரல் மாதத்தில், சந்திரசேகருக்கு அளித்த உணவில் எலி மருந்தினை கலந்து கொடுத்ததாக தெரிகிறது.

காதலனுடன் போட்ட திட்டம்

இதனால், தனியார் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த சந்திரசேகர், தீவிர சிகிச்சைக்கு பின்னர் உயிர் பிழைத்துக் கொண்டார். அப்போது, Food Poisoning என மனைவி சியாமளா தெரிவித்துள்ளார். தொடர்ந்து, நலமுடன் அவர் வீட்டுக்கு திரும்பவே, மீண்டும் காதலன் சிவாவுடன் இணைந்து புதிய திட்டம் ஒன்றையும் சியாமளா தீட்டி உள்ளார். கணவருடன் கோவிலுக்கு அழைத்து செல்வது போல, சியாமளா கிளம்ப, பைக்கில் சென்ற அவர்களை, சிவகுமார், அவரது நண்பர் மற்றும் சில உறவினர்கள் சேர்ந்து தடுத்து நிறுத்தினர்.

தொடர்ந்து, சந்திரசேகரை சரமாரியாக தாக்கிய அவர்கள், பின்னர் அங்கு வைத்தே கொலை செய்தனர். இதன் பின்னர் தான், தன்னுடைய கணவர் நெஞ்சு வலியால் பேச்சு மூச்சு இல்லாமல் இருப்பதாக உறவினர்களிடம் கூறி நாடகமாடி உள்ளார் சியாமளா. ஆனால், சந்திரசேகரின் தாயாருக்கு சந்தேகம் எழவே, போலீசாரிடம் சிக்கி கொண்டார்.

திருமணம் நடந்து, சுமார் 30 நாட்கள் மட்டுமே தாண்டிய நிலையில், காதலனுடன் சேர்ந்து மனைவியே கணவரை கொலை செய்துள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8

HUSBAND, WIFE, MARRIAGE, திருமணம், மனைவி, கணவர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்