தந்தை கண் முன் இளம்பெண் கடத்தல்.. மாலையில் திருமண கோலத்தில் வீடியோ?!.. அதிர்ச்சி பின்னணி!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தெலுங்கானா மாநிலம், ராஜண்ணா ஸ்ரீசில்லா மாவட்டத்தில் அமைந்துள்ள முட்டப்பள்ளி என்னும் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரய்யா.

Advertising
>
Advertising

Also Read | "ஒரு முட்டாளை சீக்கிரமா கண்டுபிடிச்சிட்டு".. ட்விட்டர் CEO பொறுப்பில் இருந்து விலகும் எலான் மஸ்க்?.. பரபர ட்வீட்!!

இவர் தனது மகளான ஷாலினியுடன் அதே ஊரில் இருக்கும் கோவில் ஒன்றிற்கு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அந்த சமயத்தில், கோவிலுக்குள் சாமி கும்பிட்டு விட்டு சந்திரய்யா மற்றும் அவரது மகள் ஷாலினி ஆகியோர் வெளியே வந்துள்ளனர். அப்போது அவர்கள் இருவரும் ஏதிர்பாராத சம்பவம் ஒன்று அங்கே அரங்கேறி உள்ளது. அப்பகுதியில் காரில் இருந்த நான்கு பேர், ஷாலினியை வலுக்கட்டாயமாக கடத்தி சென்றுள்ளதாக தெரிகிறது. இதனை தடுக்க முயன்ற சந்திரய்யாவையும் அவர்கள் தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதன் பின்னர், அந்த பெண்ணையும் காரில் கடத்தி சென்றுள்ளனர்.

கண் இமைக்கும் நேரத்தில் இந்த சம்பவம் நடந்து முடிந்ததால் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிய சந்திரய்யா, அருகேயுள்ள போலீஸ் நிலையம் சென்று புகார் ஒன்றை அளித்துள்ளார். இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணையையும் மேற்கொண்டனர். ஷாலினி கடத்தப்பட்ட பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் அனைத்து சம்பவங்களும் தெளிவாக இருந்தது. இதனைத் தொடர்ந்து, ஷாலினியை கடத்தியவர்களை அடையாளம் காணும் நடவடிக்கையில் போலீசார் இறங்கினர்.

இந்த சூழலில் தான் ஷாலினி கடத்தப்பட்ட விஷயத்தில் சந்திரய்யா உள்ளிட்ட யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் ஒன்று அரங்கேறி உள்ளது. கடத்தப்பட்டதாக கருதப்பட்ட இளம்பெண் ஷாலினி, ஒரு ஆணுடன் மணக்கோலத்தில் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் தனது காதலன் என்றும் அவரை தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் ஷாலினி அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது என்றும் குறிப்பிடும் ஷாலினி, தன்னை கடத்தப் போகிறார்கள் என்பது முதலில் தெரியாது என்றும், கடத்தியவர்கள் முகத்தில் முகமூடி அணிந்திருந்ததால் முதலில் கடத்தப்பட்டதாக தான் நினைத்திருந்தேன் என்றும் கூறி உள்ளார். இதனையடுத்து, தான் காதலித்து வந்த வாலிபரை கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளார் ஷாலினி.

முதலில் இளம்பெண் கடத்தப்பட்டதாக கருதப்பட்ட நிலையில், பின்னர் காதலன் தான் இப்படி செய்தார் என்பதும் பின்னர் அவர்கள் திருமணம் செய்து கொண்டதும் அப்பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also Read | அதிர்ச்சி! ஒரு மாதத்தில் திருமணம்.. சேகர் ரெட்டி மகளுக்கு நிச்சயமான மாப்பிள்ளை மாரடைப்பால் மரணம்!!

TELANGANA, GIRL, KIDNAP, FATHER, MARRIED, LOVER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்