"உனக்கு, இன்னொரு கள்ளக்காதலனா?" - 'காதலி' மேல் உள்ள ஆத்திரத்தில், 5 வயது சிறுமியின் கழுத்தை 'பிளேடால்' அறுத்த 'காதலன்'! - அதிர்ச்சி சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஹைதராபாத் பகுதியில், 5 வயது சிறுமியை கொன்று மற்றொரு நபரையும் கொலை செய்ய முயற்சித்து தானும் இறுதியில் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, சிறுமியை கொலை செய்த அந்த 25 வயது வாலிபர், சிறுமியின் தாயுடன் பழக்கத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், அந்த நபருடனான தொடர்பை சிறுமியின் தாயார் மொத்தமாக தவிர்த்துள்ளதாக தெரிகிறது. இதனால் அந்த நபர் சிறுமியின் தாயாரை பார்க்க அவரது வீட்டிற்கே வந்துள்ளார். அங்கு இருவருக்கும் பொதுவான நபர் ஒருவர், சிறுமியின் தாயாருடன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நபர், கோபத்தில் அங்கிருந்தவர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

தொடர்ந்து, அங்கிருந்த சிறுமியின் கழுத்தை பிளேடால் அறுத்துள்ளார். மேலும், இருவருக்கும் பொதுவான அந்த நண்பரையும் கொலை செய்ய முயன்று, தொடர்ந்து தானும் தற்கொலை செய்து கொள்ள பிளேடு மூலம் கழுத்தை அறுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, உடனடியாக அந்த சிறுமியை மீட்டு மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில், செல்லும் வழியிலேயே சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பின்னர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாருடன் பழகியதை கொலை செய்த அந்த நபர் ஒப்புக் கொண்டுள்ளார். இருந்த போதும், சிறுமியை தாக்கியதற்கான காரணங்கள் இன்னும் சரிவர தெரியவில்லை. தாக்குதல் நடத்திய அந்த நபரும், காயமடைந்த மற்றொரு நபரும் வெவ்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. சிறுமியை தாயாரின் காதலனே கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்