பிரேத பரிசோதனை அறிக்கையில 'அந்த' விஷயத்தை மறச்சுட்டாங்க... வெளியான அதிர்ச்சி தகவல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கடந்த ஜூன் 14-ம் தேதி மும்பையில் உள்ள தன்னுடைய வீட்டில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டார். அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் தொடர்ந்து சிபிஐ விசாரணை வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கிடையில் சுஷாந்த் மரணத்திற்கு காரணம் அவரது காதலி ரியா தான் என தந்தை கே.கே.சிங் பீஹார் காவல்நிலையத்தில் புகாரளித்தார்.

இதையடுத்து இந்த வழக்கு மீண்டும் வேகமெடுத்து சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது அமலாக்கத்துறை ரியா அவரது குடும்பத்தினர் உட்பட பல்வேறு நபர்களையும் விசாரணை வளையத்தில் கொண்டு வந்துள்ளனர். சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை வேறு ஏதேனும் நிகழ்ந்ததா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பிரேத  சுஷாந்த் இறந்த நேரம் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை என அவரது குடும்ப வழக்கறிஞர் விகாஸ் சிங் குற்றஞ்சாட்டி இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''பிரேத பரிசோதனை அறிக்கையில் இறப்பு நேரம் இல்லை. இது ஒரு முக்கியமான விவரம். அவர் கொலை செய்யப்பட்ட பின் தூக்கில் போடப்பட்டாரா? இல்லை தூக்குப்போட்டு இறந்தாரா? என்பதை மரண நேரத்தை வைத்து அறியலாம்,'' என தெரிவித்து இருக்கிறார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்