சுஷாந்த் சிங் வழக்கில் சிக்கும் நடிகை..? உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்திய NCB !!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பாலிவுட்டில் முன்னணி நடிகராக விளங்கியவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்றின் திரைப்படத்தில் நாயகனாக நடித்ததன் மூலம், மக்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலம் அடைந்தார் சுஷாந்த்.

Advertising
>
Advertising

Also Read | Heat பண்ணாலும் உருகாத ஐஸ்க்ரீம்.. குதூகலமான ஐஸ்க்ரீம் பிரியர்கள்.. "வெயில்'ல வெச்சு கூட இத குடிக்கலாம் போலயே.."

இந்நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 14 ஆம் தேதியன்று, திடீரென அவரது வீட்டில் உயிரிழந்து கிடந்தார். இந்த சம்பவம், ஒட்டுமொத்த இந்திய சினிமாவிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து, போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போதை பொருள் வழக்கு

மேலும், இந்த வழக்கில் போதை கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் கிடைத்ததால், போதைப் பொருள் தடுப்பு பிரிவினரும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் பல பிரபலங்கள் விசாரணை வளையத்திற்குள் சிக்கி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அதே போல, நடிகர் சுஷாந்த்தின் காதலியாக இருந்த ரியா சக்ரபோர்த்தி, கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், போதை பொருள் வழக்கில் கைது செயப்பட்டிருந்தார். பின்னர், ஒரு மாதத்தில் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். ரியாவின் சகோதரர் ஷோயிக் மற்றும் பலர், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர்.

குற்றப்பத்திரிக்கை தாக்கல்

மேலும், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தொடர்பாக, போதை பொருள் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கை அறிக்கையில், நடிகை ரியா அவரது சகோதரர் ஷோயிக் உள்ளிட்டவர்களிடம் இருந்து, போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.

மேலும், போதை பொருள் கட்டுபாட்டுப் பணியகம் (Narcotics Control Bureau), குற்றம் சாட்டப்பட்ட 35 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பத்திரிக்கையின் படி, குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் டிசம்பர் வரை ஒருவராக, அல்லது குழுக்களாக இணைந்து பிரபலங்கள் பலருக்கு போதை பொருள் வாங்கவும், விற்கவும் விநியோகம் செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

ரியா சக்ரபோர்த்தி?

இப்படி போதை பொருள் விநியோகம் செய்து வந்தவர்களிடம் இருந்து வாங்கிய ரியா, அதனை சுஷாந்த் சிங்கிற்கு வழங்கியும் வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான பணத்தையும்  அவரே செலுத்தியாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதன் காரணமாக, கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல், சுஷாந்த் சிங்கிற்கு, நடிகை ரியா போதை பொருளை வாங்கி கொடுத்து வந்ததும் தெரிய வந்ததாக அதிகரிகர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு வேளை இந்த குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில், அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வரை விதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக, சுஷாந்த் சிங் உயிரிழந்த சமயத்தில், பேசி இருந்த ரியா சக்ரபோர்த்தி, சுஷாந்த் சிங்கை போதை பழக்கத்தில் இருந்து நிறுத்த முயற்சி செய்ததாகவும், தனக்கு எந்த போதை பொருள் விநியோகம் செய்பவருடன் தொடர்பு இல்லை என்றும் NDTV க்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | ஒரே கிராமத்துல.. 30-க்கும் மேல இரட்டையர்கள்.. திகைத்து போன ஆய்வாளர்கள்.. "தமிழ்நாட்டில் இப்டி ஒரு அதிசய கிராமமா?"

SUSHANT SINGH RAJPUT, SUSHANT SINGH RAJPUT CASE, NCB, RHEA CHAKRABORTY, சுஷாந்த் சிங் வழக்கு

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்