"அமித் ஷா ஐயா!.. உங்கள கைகூப்பி கெஞ்சி கேட்கிறேன்...!" - கண்ணீருடன் 'கோரிக்கை' வைத்த நடிகை ரியா! - வெளியான 'பரபரப்பு' தகவல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என்று நடிகை ரியா சக்ரபோர்த்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தும், நடிகை ரியா சக்ரபோர்த்தியும் காதலித்ததாக கிசுகிசுக்கள் வெளியான நிலையில், அது உண்மை என நிரூபிக்கும் வகையில் ரியா டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து ரியா கூறியிருப்பதாவது, "மதிப்பிற்குரிய அமித் ஷா ஐயா, நான் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் காதலி ரியா சக்ரபோர்த்தி. சுஷாந்த் மரணித்து தற்போது ஒரு மாதம் ஆகிவிட்டது. அரசாங்கத்தின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. எனினும், நீதி கிடைக்க வேண்டுமென்று, கைக்கூப்பி உங்களை நான் வேண்டிக்கொள்கிறேன். தயவு செய்து சுஷாந்த மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுங்கள். சுஷாந்த் இந்த முடிவை எடுப்பதற்கு என்ன காரணம் என்பது மட்டும் எனக்கு தெரிய வேண்டும். இப்படிக்கு, தங்கள் நேர்மையுள்ள #satyamevajayate"

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். இது பாலிவுட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்