நடிகை மரண வழக்கில் ஏற்பட்ட அடுத்த திருப்பம்.. 25 பேர்கிட்ட நடந்த தொடர் விசாரணை.. போலீசார் சொன்ன தகவல்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நடிகை சோனாலி போகட் மரணமடைந்த வழக்கில் மேலும் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

Advertising
>
Advertising

Also Read | நடிகை மரணமடைந்த விவகாரம்.. சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போலீஸ்.. வெளிச்சத்துக்கு வந்த மர்மம்..!

சோனாலி போகட்

ஹரியானாவை சேர்ந்த சோனாலி போகட், தொலைக்காட்சி தொகுப்பாளராக மக்கள் மத்தியில் அறிமுகம் ஆனார். இதனைத் தொடர்ந்து, டிக்டாக் செயலி மூலம் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமான சோனாலி போகட், ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 14 ஆவது சீசனில் போட்டியாளராகவும் கலந்து கொண்டிருந்தார். இதன் காரணமாக, மக்கள் மத்தியில் இன்னும் பிரபலம் ஆனார் சோனாலி. அது மட்டுமில்லாமல், கடந்த 2019 ஆம் ஆண்டு ஹரியானா சட்டப்பேரவை தேர்தலிலும் போட்டியிட்டிருந்தார்.

சோகம்

41 வயதான சோனாலி சமீபத்தில் கோவாவுக்கு சுற்றுலா சென்றிருந்ததாக தெரிகிறது. அப்போது உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் அவர் மரணமடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் மாரடைப்பினால் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. இதனிடையே, சில தினங்களுக்கு முன்னர் சோனாலியின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், அவரது உடலில் காயங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிகிறது.

இதனையடுத்து, கோவா மாநில காவல்துறையினர் சோனாலியின் உதவியாளராக இருந்த சுதிர் சங்வான் மற்றும் அவரது நண்பர் சுக்விந்தர் வாசி ஆகிய இருவர்மீதும் கொலை வழக்கு பதிவு செய்தனர். இதுகுறித்து பேசிய கோவா மாநில காவல்துறை அதிகாரியான ஓம் வீர் சிங் பிஷ்னாய்,"சுதிர் சங்வான் மற்றும் அவரது நண்பர் சுக்விந்தர் வாசி இருவரும் சோனாலிக்கு பானத்தில் ரசாயன மருந்தை கலந்து கொடுத்திருப்பது தெரியவந்திருக்கிறது. அதன்பிறகு சோனாலியை இருவரும் அழைத்துச் செல்வதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இருப்பினும் அந்த ரசாயனம் என்ன என்பது இன்னும் புலனாகவில்லை. இதுகுறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்திருந்தார்.

மேலும் 2 பேர் கைது

இந்நிலையில், உயிரிழப்பதற்கு முன்னர் சோனாலி சென்ற ஹோட்டல் பணியாளர்கள், அவர் தங்கியிருந்த விடுதியின் உரிமையாளர், ஊழியர்கள் என 25 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதன் பலனாக போதை பொருள் விற்பனையாளரான தத்தபிரசாத் கோன்கர் மற்றும் சோனாலி இறப்பதற்கு முன்தினம் சென்ற ஹோட்டலின் உரிமையாளர் எட்வின் நூன்ஸ் என்ற இருவரையும் காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். இருவரிடமும் தொடர் விசாரணை நடைபெற்றுவருவதாக கோவா மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Also Read | "ஏதோ தப்பா நடக்குது".. உயிரிழந்த நடிகை இறுதி நிமிடத்தில் போனில் சொன்ன விஷயம்.. சகோதரி வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்..!

SONALI PHOGAT, SONALI PHOGAT DEATH CASE, BJP LEADER SONALI PHOGAT, BIGG BOSS SONALI PHOGAT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்