"'அம்மா' இல்லாம '10' வருஷம் 'தனியா' இருக்காரு... அதுக்கப்புறம் இப்போ தான்..." 'தந்தை'யின் 'மறுமணம்' குறித்து பதிவிட்ட 'மகன்'!!... வாழ்த்தித் தள்ளிய 'நெட்டிசன்'கள்!!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ட்விட்டரில் தனது தந்தையின் மறுமணம் தொடர்பான புகைப்படங்களை நபர் ஒருவர் பகிர்ந்த நிலையில், நெட்டிசன்களிடையே அதிகம் வைரலாகி வருகிறது.

ஷாயோன் என்ற அந்த நபர், தனது தந்தையின் திருமணம் தொடர்பான புகைப்படங்களுடன், 'எனது தந்தையின் திருமணம் முந்தைய நாள் நடைபெற்றது. கொரோனா தொற்று காரணமாக, குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு, ஒரு கனவைப் போலவே உள்ளது. எனது தாய் இறந்து 10 வருடங்கள் தனியாக இருந்த என் தந்தை மீண்டும் தனது காதலை கண்டுபிடித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்' என குறிப்பிட்டுள்ளார். 

 

ஷாயோனின் இந்த பதிவிற்கு நெட்டிசன்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த வயதிலும் தந்தையின் மறுமணத்திற்கு எந்தவித மறுப்பும் காட்டாமல், அதனை ஏற்றுக் கொண்டதற்கும் பலர் ஷாயோனுக்கு நன்றிகளை தெரிவித்து வருகின்றனர். இந்த பதிவு தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்