"கொலை செஞ்சுருப்பாருன்னு அன்னைக்கே ஷ்ரத்தா சொன்னா".. நண்பர்கள் சொன்ன பகீர் தகவல்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவையே அதிர வைத்துள்ள இளம்பெண் ஷ்ரத்தா கொலை வழக்கில் அஃப்தாப் குறித்து புதிதாக வெளியான தகவல், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "கேரளா, டெல்லி".. 2 கொலைகள்.. இரண்டுக்கும் நடுவே இருந்த ஒற்றுமைகள்??... பீதியை ஏற்படுத்தும் பின்னணி!!

டெல்லியில் தனது காதலருடன் இணைந்து வாழ்ந்து வந்த இளம்பெண் ஷ்ரத்தா திடீரென நீண்ட நாளாக காணாமல் போயுள்ளார்.

அப்படி ஒரு சூழலில் இது குறித்து ஷ்ரத்தாவின் குடும்பத்தினர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தனர். இதனைத் தொடர்ந்து, ஷ்ரத்தாவுடன் லிவிங் டுகெதர் ரிலேஷனில் இருந்து வந்த அவரது காதலர் அஃப்தாப்பை போலீசார் விசாரித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ஷ்ரத்தா தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி அமீனை வற்புறுத்தியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அமீன், ஷ்ரத்தாவை கொலை செய்து அவருடைய உடலை 35 பாகங்களாக வெட்டி, ஃபிரிட்ஜில் வைத்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமும் இரவு 2 மணியளவில் உடல் பாகங்களை எடுத்துச் சென்று டெல்லியின் பல்வேறு பகுதிகளில் அமீன் வீசியதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து, காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடர்ந்து வந்தனர்.

இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஷ்ரத்தாவை கொலை செய்த பிறகு, ரத்த கறையை போக்குவது மற்றும் உடல் பாகங்களின் இயக்கம் குறித்து அமீன் இணையத்தில் தேடியதாக சொல்லப்படுகிறது. மேலும், தனது வீட்டிற்கு அருகில் இருந்த கடையில் இருந்து ஃபிரிட்ஜ் ஒன்றை வாங்கிய அமீன் அதில் ஷ்ரத்தாவின் உடலை பத்திரப்படுத்தி வைத்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, அமீன் மீது IPC 302 (கொலை), 201 (தடயங்களை அழிக்க முயற்சித்தல்) ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதே போல, ஷ்ரத்தாவின் உடல் பாகங்கள் வீட்டில் இருக்கும் போதே வேறு பெண்களை வீட்டிற்கு அஃப்தாப் அழைத்து வந்ததும் தெரிய வந்தது. இப்படி அடுத்தடுத்து ஷ்ரத்தா கொலை வழக்கில் தகவல் வெளியாகி வரும் நிலையில், தற்போது அடுத்து ஒரு புதிய தகவலும் கிடைத்துள்ளது. ஷ்ரத்தாவின் கொலை தொடர்பாக அவரது நண்பர்களான ரஜத் சுக்லா மற்றும் லக்ஷ்மண் நதீர் ஆகியோர் சில தகவல்களை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பேசும் ரஜத் சுக்லா, "ஷ்ரத்தாவின் மரணம் குறித்த செய்தி போனில் தெரிந்ததும் அதை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தேன். 2019 ஆம் ஆண்டு ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக எங்களிடம் ஷ்ரத்தா தெரிவித்து இருந்தார். ஒன்றாக வாழ்ந்து வந்த அவர்கள் ஆரம்பத்தில் மிகவும் சந்தோஷமாகத் தான் இருந்தனர். ஆனால் அதன் பிறகு தன்னை அஃப்தாப் அடிக்கடி அடிப்பதாகவும் ஷ்ரத்தா கூறி இருந்தார். அஃப்தாப்பை விட்டு விலகவும் ஷ்ரத்தா விரும்பினார். ஆனால் அவரால் அது முடியவில்லை. அதன் பிறகு மெல்ல மெல்ல அவருடன் என் தொடர்பும் குறைந்தது" எனக் கூறியுள்ளார்.

இதே போல லக்ஷ்மண் இந்த சம்பவம் குறித்து பேசுகையில், "என்னை இரண்டு மாதங்களுக்கு முன்பு ஷ்ரத்தா தொடர்பு கொண்டார். ஆனால் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து எனது எந்த உரைக்கும் அவர் பதில் அளிக்கவில்லை. அவருடைய தொலைபேசியும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதன் பிறகு அவரிடம் இருந்து எந்த பதிலும் வராததால் சந்தேகம் அடைந்து அவரது சகோதரரிடம் இதுகுறித்த விஷயத்தை சொன்னேன். அதன் பின்னர் தான் அவர்கள் போலீஸ் உதவியை நாடினர்.

ஷ்ரத்தா மற்றும் அஃப்தாப் ஆகிய இருவரும் அடிக்கடி சண்டை போட்டு வந்தனர். ஒருநாள் இரவு அளவுக்கு அதிகமாக சண்டை ஏற்பட்டதால் அந்த இரவு அவளை எங்காவது அழைத்துச் செல்லுமாறும் வாட்ஸ் அப்பில் எனக்கு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார் ஷ்ரத்தா. அன்று இரவு அஃப்தாப்புடன் இருந்திருந்தால் அவர் என்னை கொலை செய்திருப்பார் என்றும் ஷ்ரத்தா எங்களிடம் கூறினார்.

தொடர்ந்து இந்த விஷயத்தில் அஃப்தாப்பை நாங்கள் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பதாக எச்சரிக்கவும் செய்தோம். ஆனால், ஷ்ரத்தா வேண்டாம் என கூறியதால் நாங்கள் அதற்கான முயற்சியை எடுக்கவே இல்லை" என கூறி உள்ளார். ஒன்றாக வாழ ஆரம்பித்த சில தினங்களிலேயே அவர்களுக்கு இடையே பிரச்சனைகள் ஆரம்பித்ததாக நண்பர்கள் கூறியுள்ள தகவல், இன்னும் பதற்றத்தை உண்டு பண்ணி உள்ளது.

Also Read  | "முன்னாடியே அதை செய்யணும்னு நெனச்சேன்.. ஆனா".. நடுங்க வச்ச ஷ்ரத்தா வழக்கு.. கைதான காதலன் கொடுத்த அதிரவைக்கும் வாக்குமூலம்..!

DEHLI, SHRADDHA CASE, SHRADDHA FRIENDS, BEHAVIOUR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்