"தடயத்தை மறைச்சே ஆகணுமே".. ஷ்ரத்தா எலும்பை எடுத்து.. அஃப்தாப் செஞ்ச பதற வைக்கும் காரியம்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவையே அதிர வைத்த ஷ்ரத்தா கொலை வழக்கு தொடர்பாக தற்போது மேலும் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

                         Images are subject to © copyright to their respective owners.

Also Read | "இந்தியாலயும் நிலநடுக்கம் இருக்குமா?".. துருக்கி பூகம்பத்தை முன்பே கணிச்ச நிபுணர் சொன்ன பரபர தகவல்!!

டெல்லியில் தனது காதலருடன் இணைந்து வாழ்ந்து வந்த இளம்பெண் ஷ்ரத்தா வாக்கர் திடீரென நீண்ட நாளாக காணாமல் போயுள்ளார். அப்படி ஒரு சூழலில் இது குறித்து ஷ்ரத்தாவின் தந்தை போலீஸ் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து, ஷ்ரத்தாவுடன் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்த அவரது காதலர் அஃப்தாப்பை போலீசார் விசாரித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அடிக்கடி காதலியுடன் சண்டை போட்டு வந்ததன் பெயரில் கடும் ஆத்திரத்தில் இருந்த அஃப்தாப், ஷ்ரத்தாவை கொலை செய்து அவருடைய உடலை 35 பாகங்களாக வெட்டி, ஃபிரிட்ஜில் வைத்திருந்ததாகவும் தகவல்கள் வெளியானது.

Images are subject to © copyright to their respective owners.

இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்ட நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதில், அவர் மீதான குற்றச்சாட்டுகளையும், ஷ்ரத்தாவை கொலை செய்ததையும் அஃப்தாப் ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து, ஷ்ரத்தாவின் உடல் பாகங்களை பல்வேறு இடங்களில் வீசி இருந்த நிலையில், அந்த இடங்களையும் அஃப்தாப் போலீசாரிடம் அடையாளம் காட்டி இருந்தார்.

தொடர்ந்து அஃப்தாப் குறித்து பல்வேறு கட்ட விசாரணைகள் நடைபெற்று வந்த சூழலில், அடுத்தடுத்து நிறைய அதிர்ச்சி தகவல்களும் போலீசாருக்கு கிடைத்த வண்ணம் இருந்தது. இதற்கிடையில், ஷ்ரத்தா கொலை வழக்கு தொடர்பாக போலீசார் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்திருந்தனர்.

Images are subject to © copyright to their respective owners.

இந்த நிலையில், தற்போது மற்றொரு தகவலும் ஷ்ரத்தா கொலை குறித்து வெளியாகி உள்ளது. அதன்படி, ஷ்ரத்தாவின் எலும்புகளை யாருக்கும் தெரியாமல் ஆக்க வேண்டும் என்பதற்காக அதனை கிரைண்டரில் போட்டு பவுடர் ஆக மாற்றி உள்ளார் அஃப்தாப். அதே போல, கொலை செய்து 3 மாதங்கள் கழித்து தான் ஷ்ரத்தான் தலையை அவர் அப்புறப்படுத்தி உள்ளார். தொடர்ந்து, வேறு பெண்ணுடன் பழகி வந்த அஃப்தாப், அவர் வீட்டிற்கு வரும் போது ஃப்ரிட்ஜில் இருந்த ஷ்ரத்தா உடலை சமையல் அறைக்கும் மாற்றி வைத்து, அவர் சென்ற பிறகு, மீண்டும் ஃப்ரிட்ஜ்ஜிற்குள் வைத்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

Also Read | "எல்லாம் பசங்களுக்காக தான்".. 12 வருசமா அரசு பள்ளி ஆசிரியர் செய்து வரும் அசத்தலான காரியம்.. குவியும் பாராட்டு!!

SHRADDHA CASE, AFTAAB

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்