"அது அவன் கொடுத்த மோதிரம்".. ஷ்ரத்தா இறந்த பின்... வீட்டுக்கு வந்த அஃப்தாப் Girl Friend.. பகீர் கிளப்பும் புதிய தகவல்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

டெல்லியில் ஷ்ரத்தா என்ற இளம்பெண் கடந்த மே மாதம் அவரது காதலரால் கொலை செய்யப்பட்ட சம்பவம், ஆறு மாதங்கள் கழித்து சமீபத்தில் தெரிய வந்து கடும் பீதியை உண்டு பண்ணி இருந்தது.

Advertising
>
Advertising

Also Read | "வெறும் 49 செகண்ட் தான்".. 80 வயதில் பாட்டி செஞ்ச சம்பவம்.. "எல்லாரும் கத்துக்கணும் பாஸ்"

இந்த வழக்கு தொடர்பாக ஷ்ரத்தாவின் காதலர் அஃப்தாப் குறித்து பல திடுக்கிடும் தகவல்களும் வெளியாகி வந்தது.

முன்னதாக, டெல்லியில் தனது காதலருடன் இணைந்து வாழ்ந்து வந்த இளம்பெண் ஷ்ரத்தா திடீரென நீண்ட நாளாக காணாமல் போயுள்ளார்.

அப்படி ஒரு சூழலில் இது குறித்து ஷ்ரத்தாவின் குடும்பத்தினர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தனர். இதனைத் தொடர்ந்து, ஷ்ரத்தாவுடன் லிவிங் டுகெதர் ரிலேஷனன்ஷிப்பில் இருந்து வந்த அவரது காதலர் அஃப்தாப்பை போலீசார் விசாரித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அடிக்கடி காதலியுடன் சண்டை போட்டு வந்ததன் பெயரில் கடும் ஆத்திரத்தில் இருந்த அஃப்தாப், ஷ்ரத்தாவை கொலை செய்து அவருடைய உடலை 35 பாகங்களாக வெட்டி, ஃபிரிட்ஜில் வைத்திருந்ததாகவும் தெரிய வந்தது.

தினமும் இரவு 2 மணியளவில் உடல் பாகங்களை எடுத்துச் சென்று டெல்லியின் பல்வேறு பகுதிகளில் அஃப்தாப் வீசியதும் விசாரணையில் உறுதியானது. இதனையடுத்து, காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடர்ந்து வந்தனர்.

கடந்த மே மாதமே ஷ்ரத்தா கொலை செய்யப்பட்டிருந்த நிலையில், நீண்ட நாட்களாக அவர் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் யாருடனும் தொடர்பில் இல்லை என்பதால் சந்தேகத்தில் போலீசிடம் புகாரளிக்க, அஃப்தாப் சிக்கிக் கொண்டார். இந்த வழக்கு குறித்து பல்வேறு தகவல்களும் வெளியான வண்ணம் உள்ளது. ஒன்றாக ஷ்ரத்தா மற்றும் அஃப்தாப் இணைந்து வாழ தொடங்கிய கொஞ்ச காலத்திலேயே இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்ததாகவும், அஃப்தாப் ஷ்ரத்தாவை அடிக்கவும் செய்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த வழக்கு குறித்து அவ்வப்போது வெளியாகி வரும் தகவல்கள் கூட கடும் அதிர்ச்சியை கிளப்பி தான் வருகிறது. இந்த நிலையில், ஷ்ரத்தா கொலை வழக்கு தொடர்பாக அஃப்தாப்பின் சமீபத்திய காதலி தெரிவித்துள்ள கருத்து தொடர்பான செய்தி, தற்போது பலரையும் திடுக்கிட வைத்துள்ளது.

ஷ்ரத்தாவை அஃப்தாப் கொலை செய்தது குறித்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண், சத்தர்பூரில் உள்ள இல்லத்தில் மனித உடல் பாகங்கள் வைக்கப்பட்டிருந்தது குறித்து தனக்கு எந்த துப்பும் இல்லை என்றும், ஷ்ரத்தா கொலை செய்யப்பட்ட பிறகு இரண்டு முறை அந்த வீட்டிற்கு சென்றுள்ளதாகவும் அஃப்தாப்பிடம் கொலை செய்த பயமே இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதே போல, அஃப்தாப் தனக்கு விலை உயர்ந்த மோதிரம் ஒன்றை பரிசு அளித்ததாகவும் கூறி உள்ளார். அஃப்தாப் பரிசளித்த மோதிரம், ஷ்ரத்தாவுக்கு சொந்தமானது என தகவல் தெரிவிக்கும் நிலையில், அந்த பெண் மனநல மருத்துவர் என்றும் கூறப்படுகிறது.

டேட்டிங் செயலி மூலம் 15 முதல் 20 பெண்களுடன் அஃப்தாப் பழகி வந்துள்ள நிலையில், இந்த பெண் மனநல மருத்துவருடன் ஷ்ரத்தா இறந்து 12 நாட்கள் கழித்து பழக தொடங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அஃப்தாப்பின் நடவடிக்கை சாதாரணமாகவும், அக்கறையுடன் இருப்பதாக அந்த பெண் மனநல மருத்துவர் தெரிவித்ததாக தகவல் கூறுகின்றது.

ஷ்ரத்தா கொலை வழக்கு குறித்து அடுத்தடுத்து ஏராளமான தகவல் வெளிவரும் சம்பவம், தொடர்ந்து இந்த விஷயத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியும் வருகிறது.

Also Read | இந்திய கொடியை அணிந்து கொண்டு.. கால்பந்து போட்டி பாக்க வந்த அர்ஜென்டினா பெண்.. காரணம் தெரிஞ்சு கொண்டாடும் இந்தியர்கள்!!

SHRADDHA CASE, SHRADDHA AAFTAB CASE, GIRLFRIEND

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்