“விடமாட்டோம்!”.. “சுஷாந்த் சிங் விவகாரத்தில்.. தீவிரமாகும் அடுத்தகட்ட விசாரணை!”.. முக்கிய பிரபலங்களுக்கு பறக்கும் நோட்டீஸ்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரத்தில் யஷ் ராஜ் ஜோப்ரா தயாரிப்பு நிறுவனத்தின் காஸ்டிங் இயக்குநர் ஷானு ஷர்மா மற்றும் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 14ம் தேதி தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்ட இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த், மரணத்திற்கு முன்பாக, தனது பெயரை கூகுளில் தேடியுள்ளதாக, சைபர் கிரைம் வட்டாரங்கள் தெரிவிப்பதாக தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. இதேபோல் பாலிவுட்டில் நிலவும் நெப்போடிசம் காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தால் தான் இந்த கொடிய முடிவை சுஷாந்த் எடுத்துள்ளதாக அவரது ரசிகர்கள் கருதும் நிலையில், பாலிவுட் பிரபலங்களின் தொடர் அழுத்தத்தால், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வழக்கு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதன் முதற்கட்ட விசாரணையில் சுஷாந்த் சிங்கின் முன்னாள் காதலி வரை பலரும் விசாரிக்கப்பட்ட நிலையில், தற்போது பிரபல தயாரிப்பு நிறுவனமான யஷ்ராஜ் பிலிம்ஸின் காஸ்டிங் இயக்குநர் ஷானு ஷர்மாவிடம் இரண்டாம் கட்ட விசாரணைக்காகவும் அவருக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளனர். ஏற்கனவே அவரை போலீஸார் விசாரித்திருந்த நிலையில் தற்போது மறு விசாரணைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

தவிர, ராம் லீலா, பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் போன்ற பல பிரம்மாண்ட பாலிவுட் படங்களை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலியின், இயக்கத்தில் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான ராம் லீலா படத்தில் முதலில் நடிக்க இருந்தது சுஷாந்த் சிங் ராஜ்புத் என்பதாலும், ஆனால், கடைசி நேரத்தில் அவர் மாற்றப்பட்டு, ரன்வீர் சிங் அந்த படத்தில் நாயகனாக நடித்ததாலும், இதே போல்,  சஞ்சய் லீலா பன்சாலியின் பாஜிராவ் மஸ்தானி படத்திலும் சுஷாந்த் சிங்கிடம் பேச்சுவார்த்தை நடத்தி பின்னர், அந்த படத்திலும் ரன்வீரை ஒப்பந்தம் செய்யப்பட்டதாலும், சஞ்சய் லீலா பன்சாலியை விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

முகேஷ் சப்ரா இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் சுஷாந்த் சிங் ராஜ்புத், சைஃப் அலி கான், சஞ்சனா சங்கி நடிப்பில் உருவாகி உள்ள சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கடைசி படமான தில் பெச்சாரா வரும் ஜூலை 24ம் தேதி OTT தளத்தில் வெளியாக உள்ளதை அடுத்து டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ள இப்படத்தை வருத்தத்துடன் ரசிகர்கள் காண தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தில் சுஷாந்துடன் இணைந்து நடித்த சஞ்சனா சங்கியும் விசாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்